செய்திகள் :

தனது அபார பந்துவீச்சுக்கான ரகசியம் பகிர்ந்த ஷிவம் துபே!

post image

இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஷிவம் துபே தனது அபார பந்துவீச்சுக்கான ரகசியம் பகிர்ந்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபையில் நேற்று (செப்டம்பர் 10) நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியின் தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஷிவம் துபே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

சர்வதேச டி20 போட்டிகளில் ஷிவம் துபேவின் மிகச் சிறந்த பந்துவீச்சு இதுவாகும். நேற்றையப் போட்டியில் 2 ஓவர்கள் வீசிய அவர், வெறும் 4 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

ரகசியம் பகிர்ந்த ஷிவம் துபே

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டி நிறைவடைந்த பிறகு, பந்துவீச்சில் வெற்றிகரமாக செயல்பட்டதற்கான ரகசியத்தை ஷிவம் துபே பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்காக இந்திய அணியில் இடம்பெற்றதிலிருந்து பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல்லுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். அவர் எனது பந்துவீச்சில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக குறிப்பிட்ட சில அறிவுரைகளை வழங்கினார். அவர் கொடுத்த அறிவுரைகளை கேட்டு அதன்படி பயிற்சி மேற்கொண்டேன்.

ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே பந்து வீசுமாறு கூறினார். அதேபோன்று, மெதுவாக பந்துவீசுவது, பந்துவீச ஓடி வருவதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து அறிவுரை வழங்கினார். பந்துவீச்சில் உங்களது பங்களிப்பு அணிக்கு முக்கியமாக தேவைப்படும் என தலைமைப் பயிற்சியாளர் மற்றும் இந்திய அணியின் கேப்டன் இருவரும் என்னிடம் கூறினர் என்றார்.

Shivam Dubey, one of the Indian team's all-rounders, has shared the secret to his incredible bowling.

இதையும் படிக்க: காயம் காரணமாக ஆரோன் ஹார்டி விலகல்..! புதிய ஆல்-ரவுண்டர் சேர்ப்பு!

அடுத்த போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா; கபில் தேவ் கொடுத்த முக்கிய அறிவுரை!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு முன்பாக இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் கபில் தேவ் அறிவுரை வழங்கியுள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முன் தினம் ... மேலும் பார்க்க

அடுத்தடுத்து வீரர்கள் காயமடைவதால் பிரச்னையில் தென்னாப்பிரிக்க அணி!

அடுத்தடுத்து வீரர்கள் காயமடைவதால் தென்னாப்பிரிக்க அணி புதிய பிரச்னையை சந்திக்க உள்ளது.நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான தென்னாப்பிரிக்க அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 ஆம் ஆண்டுக்கான சுழற்சிக்கான போட... மேலும் பார்க்க

குல்தீப் யாதவ் பந்துவீச்சைக் கணிக்க முடியாது: முன்னாள் பாகிஸ்தான் வீரர்!

இந்திய சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் புகழ்ந்து பேசியுள்ளார். ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை வரும் நிலையில் வாசிம் அக்ரம... மேலும் பார்க்க

காயம் காரணமாக ஆரோன் ஹார்டி விலகல்..! புதிய ஆல்-ரவுண்டர் சேர்ப்பு!

இந்தியா ’ஏ’க்கு எதிரான தொடரிலிருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய ’ஏ’ அணியின் ஆல்ரவுண்டர் ஆரோன் ஆர்டி விலகியுள்ளார். தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆரோன் ஆர்டி விலகியுள்ளது ஆஸி. அணிக்கு பின்னடைவை ஏற்... மேலும் பார்க்க

மகளிர் உலகக் கோப்பையில் அனைத்து நடுவர்களுமே பெண்கள்..! ஐசிசி அதிரடி!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடுவர்கள் அனைவருமே பெண்களாக நியமித்து ஐசிசி அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்தியா, இலங்கையில் செப்.30ஆம் தேதி முதல் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன. மகளிர் உலகக் கோப்பையில்... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடியாது! உச்ச நீதிமன்றம்

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.ஆசியக் கோப்பை ஆடவர் கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றில் இந்தியாவும் ப... மேலும் பார்க்க