செய்திகள் :

சென்னை: கோயம்பேட்டில் அரசு பேருந்தை திருடிய வடமாநில இளைஞர் - நெல்லூரில் சிக்கிய பின்னணி!

post image

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசுக்கு சொந்தமான பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்தப் பேருந்தை ஓட்டிச் செல்ல டிரைவரும் கண்டக்டரும் நேற்று (11.9.2025) வந்தனர். அப்போது அங்கு பேருந்து இல்லை. அதனால், டிரைவரும் கண்டக்டரும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்த கிளை மேலாளர் ராம்சிங்கிடம் விவரத்தைக் கூறினர். அதனால் அதிர்ச்சியடைந்த ராம்சிங்கும், டிரைவர், கண்டக்டர் ஆகியோர் கோயம்பேடு பேருந்து நிலையம் முழுவதும் அந்தப் பேருந்தை தேடினர். ஆனால் எங்கும் அந்தப் பேருந்து இல்லை. இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலைய பகுதியில் உள்ள சி.சி.டி.வி-க்களை போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, நள்ளிரவில் பேருந்தை இளைஞர் ஒருவர் ஓட்டிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த இளைஞர் யார் என்று போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தெரியவில்லை. இதையடுத்து பேருந்தைக் காணவில்லை என கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் கிளை மேலாளர் ராம்சிங் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து பேருந்து எங்கு செல்கிறது என்பதை தேட தொடங்கினர்.

திருடப்பட்ட அரசு பேருந்து

இந்த சமயத்தில் ஆந்திர மாநிலம் நெல்லூர் போலீஸார், கோயம்பேடு போலீஸாரை தொடர்பு கொண்டனர். தமிழக அரசுக்கு சொந்தமான பேருந்தை வடமாநில இளைஞர் ஒருவர் ஓட்டிச் சென்றார். அவரை மடக்கிப் பிடித்து பேருந்தை நெல்லூர் பகுதியில் நிறுத்தி வைத்திருக்கிறோம் என்ற தகவலைத் தெரிவித்தனர். அதைக்கேட்டு கோயம்பேடு பேருந்து நிலைய போலீஸாரும் போக்குவரத்து கழக ஊழியர்களும் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர். இதையடுத்து கோயம்பேட்டிலிருந்து போலீஸார் தலைமையில் போக்குவரத்து கழக டீம் நெல்லூருக்கு சென்றது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தையும் அதை திருடிச் சென்ற வடமாநில இளைஞரையும் போலீஸார் சென்னைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அவரிடம் விசாரித்தபோதுதான் அவர் (காது கேட்காதவர், வாய் பேச முடியாதவர்) மாற்றுத்திறனாளி என்பது தெரியவந்தது. இதையடுத்து சைகை மூலம் அவரிடம் கோயம்பேடு பேருந்து நிலைய போலீஸார் விசாரணை நடத்தியதில் அவரின் பெயர் ஞானரஞ்சன் சாஹூ (24) என்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் கவனக்குறைவாக செயல்பட்ட போக்குவரத்து கழக ஊழியர்கள் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஞானரஞ்சன் சாஹூ

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பேருந்து திருடப்பட்ட தகவலை உடனடியாக போக்குவரத்து கழக தரப்பிலிருந்து எங்களுக்கு புகாராக கொடுக்கவில்லை. இந்தச் சமயத்தில்தான் ஆந்திர மாநில போலீஸார், எங்களைத் தொடர்பு கொண்டு தமிழக அரசுக்குச் சொந்தமான பேருந்தை வடமாநில இளைஞர் ஒருவர் பயணிகள் இல்லாமல் தனியாக ஓட்டி வந்ததாகவும் அவரிடம் விசாரித்தபோதுதான் அது திருடப்பட்டதும் தெரியவந்தது என்ற தகவலை எங்களிடம் தெரிவித்தனர். நெல்லூர் மாநில போலீஸார், சந்தேகத்தின் பேரில் அரசு பேருந்தை மடக்கி விசாரிக்கவில்லை என்றால் வடமாநில இளைஞர், பேருந்தை வேறு எங்காவது ஓட்டிச் சென்றிருப்பார். இந்தத் தகவல் கிடைத்தவுடன் போக்குவரத்து கழக அதிகாரியிடம் பேருந்து ஏதாவது திருடப்பட்டிருக்கிறதா என கேட்டோம். அதன்பிறகே எங்களுக்கு புகார் வந்தது. நல்லவேளையாக பேருந்தை மீட்டு அதை திருடிச் சென்ற வடமாநில இளைஞரை கைது செய்துவிட்டோம்" என்றனர்.

சென்னை: கணவருக்குத் தெரியாமல் கடன்; நகைக்கடையில் திருட வந்த குடும்பத் தலைவி... கைதுசெய்த போலீஸ்!

திருவொற்றியூர், காலடிப்பேட்டை, சன்னதி தெருவில் குடியிருந்து வருபவர் தேவராஜ் ஜெயின் (54). இவர் அந்தப்பகுதியில் தங்க நகை விற்பனை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். 11.09.2025-ம் தேதி மதியம் தேவராஜ் ஜெயி... மேலும் பார்க்க

சென்னை: பைக் டாக்ஸி ஓட்டும் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; கல்லூரி மாணவன் கைதான பின்னணி என்ன?

சென்னை, ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர், குடும்பச் சூழல் காரணமாக பைக் டாக்ஸி டிரைவராக வேலை செய்து வருகிறார். 11.09.2025-ம் தேதி மதியம், கோயம்பேடு முதல் அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. வரை செ... மேலும் பார்க்க

பயன்பாடில்லாத இடத்தில் சாலை; மனு அளித்த சமூக ஆர்வலர் கார் ஏற்றிக் கொலை - பேரூராட்சித் தலைவர் கைது!

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் கருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (57). சமூக ஆர்வலரான இவர், அப்பகுதியில் உள்ள தேநீர்க் கடைக்கு புதன்கிழமை மாலை தனது இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பிக்... மேலும் பார்க்க

கோவில்பட்டி: திரைப்பட வசனம் பேசி இன்ஸ்டாகிராமில் சவால்; இளைஞரை எச்சரித்த போலீஸ்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மூப்பன்பட்டியை சேர்ந்தவர் முகில் ராஜ். இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகளில் தொடர்புடைய இ... மேலும் பார்க்க

Hyderabad: பெண்ணை கொன்று நகை, பணம் கொள்ளை; வேலைக்கு சேர்ந்த வீட்டில் இளைஞர் செய்த கொடூரம்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஸ்வான் லேக் அபார்ட்மெண்டின் 13வது மாடியில் வசித்தவர் ரேணு அகர்வால்(50). இவரது கணவர் ராகேஷ். இவர் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். ராகேஷும், அவரது மகனும் காலையில்... மேலும் பார்க்க

”நல்ல வாழ்க்கை அமையவில்லை; நாம் ஏன் வாழணும்?”- குழந்தைகளுடன் தவறான முடிவு எடுத்த சகோதரிகள்!

தஞ்சாவூர் கல்லணை கால்வாய் 20 கண் பாலம் அருகே நேற்று இரண்டு பெண்கள், பச்சிளம் குழந்தை மற்றும் 5 வயது சிறுவனுடன் ஆற்றில் குதித்தனர். இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் சிலர் ஆற்றில் குதித்த பெண... மேலும் பார்க்க