செய்திகள் :

பயன்பாடில்லாத இடத்தில் சாலை; மனு அளித்த சமூக ஆர்வலர் கார் ஏற்றிக் கொலை - பேரூராட்சித் தலைவர் கைது!

post image

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் கருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (57). சமூக ஆர்வலரான இவர், அப்பகுதியில் உள்ள தேநீர்க் கடைக்கு புதன்கிழமை மாலை தனது இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சாமளாபுரம்-காரணம்பேட்டை சாலையில் கருகம்பாளையம் அரசுத் தொடக்கப் பள்ளி அருகே வந்தபோது, அவருக்குப் பின்னால் வந்த கார் ஒன்று, பழனிசாமியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பழனிசாமி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பழனிசாமி மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்தியவர், காரை நிறுத்தாமல் சென்றது குறித்து மங்களம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சமூக ஆர்வலர் பழனிசாமி

அப்பகுதியில் இருந்தவர்களிடம், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு, தப்பிச் சென்றது திமுக-வைச் சேர்ந்த சாமளாபுரம் பேரூராட்சித் தலைவரான பழனிசாமி (60) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவரைப் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், அவர் மது போதையில் விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இந்நிலையில் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்த பழனிசாமியின் உறவினர்கள் குற்றம் சாட்டிய நிலையில், போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தின் மீது, காரை ஏற்றி பழனிசாமியை, சாமளாபுரம் பேரூராட்சித் தலைவர் பழனிசாமி கொலை செய்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக மங்கலம் போலீஸார் கூறுகையில், “விபத்தில் இறந்த பழனிசாமி சாமளாபுரம் பேரூராட்சிப் பகுதியில் மக்களுக்குப் பயன்பாடில்லாத தனியார் இடத்தில் போடப்பட்ட சாலை தொடர்பாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார். இதனால், அந்தப் பணி நிறுத்தப்பட்டது.

கைது

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் பழனிசாமிக்கும், பேரூராட்சித் தலைவர் பழனிசாமிக்கும் இடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், சமூக ஆர்வலர் பழனிசாமி மீது பேரூராட்சித் தலைவர் பழனிசாமி கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், புதன்கிழமை மாலை மது போதையில் காரை பேரூராட்சித் தலைவர் பழனிசாமி ஓட்டி வந்துள்ளார். அப்போது, தனக்கு முன்னால், இருசக்கர வாகனத்தில் சமூக ஆர்வலர் பழனிசாமி இருசக்கர வாகனத்தில் செல்வதை அறிந்து அதிவேகமாக வந்து அவர் மீது காரை ஏற்றிக் கொலை செய்துள்ளார். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்" என்றனர். பேரூராட்சித் தலைவரான பழனிசாமி, தொடக்க காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்துள்ளார். கடந்த முறை பேரூராட்சித் தேர்தலில் போட்டியிட மார்க்சிஸ்ட் கட்சியில் வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற பின், திமுக-வில் இணைந்து பேரூராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

கோவில்பட்டி: திரைப்பட வசனம் பேசி இன்ஸ்டாகிராமில் சவால்; இளைஞரை எச்சரித்த போலீஸ்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மூப்பன்பட்டியை சேர்ந்தவர் முகில் ராஜ். இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகளில் தொடர்புடைய இ... மேலும் பார்க்க

Hyderabad: பெண்ணை கொன்று நகை, பணம் கொள்ளை; வேலைக்கு சேர்ந்த வீட்டில் இளைஞர் செய்த கொடூரம்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஸ்வான் லேக் அபார்ட்மெண்டின் 13வது மாடியில் வசித்தவர் ரேணு அகர்வால்(50). இவரது கணவர் ராகேஷ். இவர் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். ராகேஷும், அவரது மகனும் காலையில்... மேலும் பார்க்க

”நல்ல வாழ்க்கை அமையவில்லை; நாம் ஏன் வாழணும்?”- குழந்தைகளுடன் தவறான முடிவு எடுத்த சகோதரிகள்!

தஞ்சாவூர் கல்லணை கால்வாய் 20 கண் பாலம் அருகே நேற்று இரண்டு பெண்கள், பச்சிளம் குழந்தை மற்றும் 5 வயது சிறுவனுடன் ஆற்றில் குதித்தனர். இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் சிலர் ஆற்றில் குதித்த பெண... மேலும் பார்க்க

Digital Arrest: 8 நாள்களில் ரூ. 31 லட்சம்; போலி நீதிபதியிடம் முன்னாள் எம்.எல்.ஏ ஏமாந்தது எப்படி?

சிபிஐ, போலீஸ், நீதிபதி போன்ற பெயர்களைப் பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் டிஜிட்டல் கைது என்ற முறையில் பொதுமக்களிடம் ஆன்லைன் வழியாக ஏமாற்றி பணம் பறித்துவரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கின... மேலும் பார்க்க

சென்னை: "பாசமாகப் பேசுவார்; பணத்தைப் பறிப்பார்" - மூதாட்டியை நூதன முறையில் ஏமாற்றிய பிரபல திருடன்

சென்னை, புது வண்ணாரப்பேட்டை, நாகூரான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி பேபி (74). இவரின் கணவர் ஜான்சன், துறைமுகத்தில் வேலை செய்து வந்தார். ஜான்சன் உயிரிழந்தநிலையில் பேபிக்கு மாதந்தோறும் பென்சன் ப... மேலும் பார்க்க

போலி ஐ.டி கார்டு, சீருடையில் சென்று மும்பை கடற்படையில் துப்பாக்கியைத் திருடிய நபர் - என்ன நடந்தது?

மும்பை கொலாபாவில் உள்ள நேவி நகரில் கடற்படைத்தளம் இருக்கிறது. இங்கு எப்போதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். அப்படிப்பட்ட பாதுகாப்பு மிக்க இடத்திற்குள் மர்ம நபர் ஒருவர் சர்வசாதாரணமாக நுழைந்து ப... மேலும் பார்க்க