செய்திகள் :

”நல்ல வாழ்க்கை அமையவில்லை; நாம் ஏன் வாழணும்?”- குழந்தைகளுடன் தவறான முடிவு எடுத்த சகோதரிகள்!

post image

தஞ்சாவூர் கல்லணை கால்வாய் 20 கண் பாலம் அருகே நேற்று இரண்டு பெண்கள், பச்சிளம் குழந்தை மற்றும் 5 வயது சிறுவனுடன் ஆற்றில் குதித்தனர். இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் சிலர் ஆற்றில் குதித்த பெண்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் இரண்டு பெண்கள் மற்றும் 5 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டனர். ஆற்றில் சென்ற கைக்குழந்தை உடல் இன்னும் கிடைக்கவில்லை. அந்த சிறுவன் சாப்பிட்ட பாப்கார்ன் அவனது வாயுக்குள் அப்படியே இருந்தது. அவன் அணிந்திருந்த கருப்பு கண்ணாடி கூட கழண்டு விழவில்லை. இரண்டு பெண்கள், 5 வயது சிறுவன் உடல்கள் கரையில் கிடத்தப்பட்டிருந்ததை கண்டவர்களின் நெஞ்சு பதைபதைத்து.

தற்கொலை

அந்த சிறுவன் பாப்கார்ன் சாப்பிட்ட படி ஓடினான், அவன் அம்மா பின்னால் ஓடி சென்று கட்டியணைத்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் ஆற்றுக்குள் குதித்து விட்டதாக நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். கைக்குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு அப்படி என்னதான் பிரச்னை, என்ன இருந்தாலும் எதிர் கொண்டு வாழ்ந்திருக்கலாம் என ஆற்றாமையை அடக்க முடியால் பலரும் கண்ணீருடன் புலம்பினார்கள். இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தற்கொலை செய்து கொண்டவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள், யார் என்கிற எந்த விபரமும் தெரியவில்லை.

இது குறித்து தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் தஞ்சாவூர் பொட்டுவாச்சாவடி ரோடு, யாகப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகள்கள் ராஜேஸ்வரி (30), துர்கா தேவி (28). ராஜேஸ்வரியின் மகன் ஹரிஷ் (6) இவரது கணவர் விஜயராகவன் உடல் நிலை பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். காதல் திருமணம் செய்து கொண்ட துர்காதேவிக்கு பத்து நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. மகள்கள் அப்பா தங்கராஜிடன் வசித்துள்ளனர். துர்காதேவிக்கும் கணவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இதனால் சகோதரிகள் இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர். நமக்கு மட்டும் ஏன் நல்ல வாழ்க்கை அமையலை, நாம் ஏன் வாழணும் என புலம்பி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் விரக்தியும் மன உளைச்சலும் அதிகமாக குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்துள்ளனர். அப்பா வெளியே சென்றதும், வெளியூருக்கு செல்வது போல் கிளம்பி வந்தவர்கள் ஆற்றில் குதித்துவிட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Digital Arrest: 8 நாள்களில் ரூ. 31 லட்சம்; போலி நீதிபதியிடம் முன்னாள் எம்.எல்.ஏ ஏமாந்தது எப்படி?

சிபிஐ, போலீஸ், நீதிபதி போன்ற பெயர்களைப் பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் டிஜிட்டல் கைது என்ற முறையில் பொதுமக்களிடம் ஆன்லைன் வழியாக ஏமாற்றி பணம் பறித்துவரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கின... மேலும் பார்க்க

சென்னை: "பாசமாகப் பேசுவார்; பணத்தைப் பறிப்பார்" - மூதாட்டியை நூதன முறையில் ஏமாற்றிய பிரபல திருடன்

சென்னை, புது வண்ணாரப்பேட்டை, நாகூரான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி பேபி (74). இவரின் கணவர் ஜான்சன், துறைமுகத்தில் வேலை செய்து வந்தார். ஜான்சன் உயிரிழந்தநிலையில் பேபிக்கு மாதந்தோறும் பென்சன் ப... மேலும் பார்க்க

போலி ஐ.டி கார்டு, சீருடையில் சென்று மும்பை கடற்படையில் துப்பாக்கியைத் திருடிய நபர் - என்ன நடந்தது?

மும்பை கொலாபாவில் உள்ள நேவி நகரில் கடற்படைத்தளம் இருக்கிறது. இங்கு எப்போதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். அப்படிப்பட்ட பாதுகாப்பு மிக்க இடத்திற்குள் மர்ம நபர் ஒருவர் சர்வசாதாரணமாக நுழைந்து ப... மேலும் பார்க்க

`புலியைப் பிடிக்க மாட்டீங்களா?' - வனத்துறை 10 பேரை புலிக்காக வைத்த கூண்டுக்குள் அடைத்த கிராம மக்கள்

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை விட்டு வெளியேறிய புலி ஒன்று கடந்த சில நாள்களாக கால்நடைகளை வேட்டையாடி வருவதாகவும் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அந்தப் புலியைக் பிடித்து காட்டுக்குள்... மேலும் பார்க்க

கடலூர்: 5 பேரின் மண்டையை உடைத்து `இன்ஸ்டா ரீல்ஸ்’ வீடியோ! - ரௌடிகளைச் சுட்டுப் பிடித்த போலீஸ்

``நல்லா அழுவுடா அப்போதான் ரீல்ஸ் கெத்தா இருக்கும்’’கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தில் வேலை செய்து வரும் கார்த்தி, கட்டுமானப் பொருட்களின் பாதுகாப்புக்க... மேலும் பார்க்க

சென்னை: காதல் ஜோடி தற்கொலை - அதிர்ச்சியில் குடும்பம்!

சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் திரிஷா (20). இவர், அண்ணாநகரில் உள்ள ஜவுளி கடையில் வேலைப்பார்த்து வந்தார். அப்போது அதே ஜவுளி கடையில் வேலை செய்துவந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராபின்... மேலும் பார்க்க