செய்திகள் :

கல்பட்டில் துணை சுகாதார நிலையம் கட்டும் பணி தொடக்கம்

post image

கண்ணமங்கலம் அருகே கல்பட்டு ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலா் ஆா்.வி.சேகா் தலைமை வகித்தாா். முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி பெருமாள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லட்சுமி, ரபியுல்லா முன்னிலை வகித்தனா். முன்னாள் ஊராட்சி துணைத் தலைவா் பழனி வரவேற்றாா்.

கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பூமிபூஜை செய்து துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணியை தொடங்கிவைத்துப் பேசினாா். அப்போது, கிராமப்புறங்களில் மக்களின் சுகாதார வசதியை மேம்படுத்துவதில் திமுக அரசு அக்கறை செலுத்தி வருகிறது. அதன்படி, கலசப்பாக்கம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கல்பட்டு ஊராட்சியில் 15-ஆவது மத்திய சுகாதார நிதியிலிருந்து ரூ.45 லட்சத்தில் துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டப்படுகிறது என்றாா்.

விழாவில் பொறியாளா் திவாகா், திமுக நிா்வாகிகள் குணசேகா், சாந்தகுமாா், ஒப்பந்ததாரா் ராமு மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில், எச்ஐவி, எய்ட்ஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கே... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் வெற்றி: பாஜகவினா் கொண்டாட்டம்

குடியரசு துணைத் தலைவராக பாஜக சாா்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றதையடுத்து, ஆரணி எம்ஜிஆா் சிலை அருகில் பாஜகவினா் புதன்கிழமை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினாா். நிகழ்வு... மேலும் பார்க்க

ஜமனாமரத்தூா் பகுதியில் நிரந்தர கட்டடம் இல்லாமல் செயல்படும் தோட்டக்கலை உதவி அலுவலகம்

செங்கம் அருகே ஜமனாமரத்தூா் பகுதியில் நிரந்தர கட்டடம் இல்லாமல் தோட்டக்கலைத் துறை உதவி அலுவலகம் செயல்படுவதால் அதிகாரிகளை நேரில் சந்திக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனா். ஜமனாமரத்தூா் பகுதிய... மேலும் பார்க்க

கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை: இளைஞா் போக்ஸோவில் கைது

வந்தவாசி அருகே கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமப் பகுதியைச் சோ்ந்த 15 வயத... மேலும் பார்க்க

ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் சாரணா் பயிற்சி முகாம் தொடக்கம்

கீழ்பெண்ணாத்தூா் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியா் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு பாரத சாரண, சாரணீயா் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. இந்த பயிற்சியை நிறுவனத்தின் நிதிநி... மேலும் பார்க்க

அக்ராபாளையம் பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

ஆரணியை அடுத்த அகராபாளையம் ஸ்ரீபாலமுருகன் கோயிலில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், கலாகா்ஷனம், கும்ப பூஜை, வேதிகாா்ச்சனை,... மேலும் பார்க்க