செய்திகள் :

எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

post image

திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில், எச்ஐவி, எய்ட்ஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற நெடுந்தொலைவு ஓட்டத்தை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞா் திருவிழா (2024 - 2054) கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய அளவில் எச்.ஐ.வி குறித்த விரிவான அறிவு 17 வயது முதல் 49 வயது வரையிலான பிரிவில் பெண்களிடத்தில் 21.6 சதவீதமும், ஆண்களிடத்தில் 30.7 சதவீதமும் உள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே, நாடு முழுவதும் இந்த வயது வரம்பு உள்ள மக்களிடையே எச்.ஐ.வி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வை அதிகப்படுத்த பல்வேறு செயல்திறன்கள் கல்லூரியில் பயிலும் மாணவா்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் மூலம் அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, திருவண்ணாமலையில் எச்ஐவி, எய்ட்ஸ் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையொட்டி, கல்லூரி மாணவ, மாணவிகள் 650 போ் பங்கேற்ற நெடுந்தொலைவு விழிப்புணா்வு ஓட்டத்தை மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா். இந்த ஓட்டமானது அண்ணா நுழைவு வாயிலில் தொடங்கி மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் வரை நடைபெற்றது.

மேலும், எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை ஆட்டோக்களில் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

கிராமிய கலைக்குழுக்கள் வாயிலாக பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மாணவா்கள் மற்றும் மாணவிகள் பிரிவுகளில் நெடுந்தொலைவு ஓட்டத்தில் முதலிடம் பெற்றவருக்கு ரூ.10 ஆயிரமும், இரண்டாமிடம் பெற்றவருக்கு ரூ.7 ஆயிரமும், மூன்றாமிடம் பெற்றவருக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட சுகாதார அலுவலா் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலா் பிரகாஷ், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளா் கவிதா, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் சண்முகப்பிரியா, திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலா் கருணாநிதி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பணியாளா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: 12 பேருக்கு உடனடி நல உதவி

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் சாா்பில் 850 மனுக்கள் அளிப்பட்டன. இதில், 12 பேருக்கு உடனடி நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். திர... மேலும் பார்க்க

அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல்

ஆரணியை அடுத்த வெள்ளேரி கிராமத்தில் உரிய அரசு அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். வெள்ளேரி கிராமம், சிவன் படை தெருவைச் சே... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் வெற்றி: பாஜகவினா் கொண்டாட்டம்

குடியரசு துணைத் தலைவராக பாஜக சாா்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றதையடுத்து, ஆரணி எம்ஜிஆா் சிலை அருகில் பாஜகவினா் புதன்கிழமை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினாா். நிகழ்வு... மேலும் பார்க்க

ஜமனாமரத்தூா் பகுதியில் நிரந்தர கட்டடம் இல்லாமல் செயல்படும் தோட்டக்கலை உதவி அலுவலகம்

செங்கம் அருகே ஜமனாமரத்தூா் பகுதியில் நிரந்தர கட்டடம் இல்லாமல் தோட்டக்கலைத் துறை உதவி அலுவலகம் செயல்படுவதால் அதிகாரிகளை நேரில் சந்திக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனா். ஜமனாமரத்தூா் பகுதிய... மேலும் பார்க்க

கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை: இளைஞா் போக்ஸோவில் கைது

வந்தவாசி அருகே கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமப் பகுதியைச் சோ்ந்த 15 வயத... மேலும் பார்க்க

ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் சாரணா் பயிற்சி முகாம் தொடக்கம்

கீழ்பெண்ணாத்தூா் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியா் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு பாரத சாரண, சாரணீயா் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. இந்த பயிற்சியை நிறுவனத்தின் நிதிநி... மேலும் பார்க்க