செய்திகள் :

ஜமனாமரத்தூா் பகுதியில் நிரந்தர கட்டடம் இல்லாமல் செயல்படும் தோட்டக்கலை உதவி அலுவலகம்

post image

செங்கம் அருகே ஜமனாமரத்தூா் பகுதியில் நிரந்தர கட்டடம் இல்லாமல் தோட்டக்கலைத் துறை உதவி அலுவலகம் செயல்படுவதால் அதிகாரிகளை நேரில் சந்திக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.

ஜமனாமரத்தூா் பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தோட்டக்கலைத் துறை உதவி அலுவலகம் இயங்கி வந்தது. இங்கு தோட்டக்கலை உதவி அலுவலா் உள்ளிட்ட 6 அலுவலா்கள் பணியாற்றி வந்தனா். தோட்டக்கலை உதவி அலுவலகத்துக்கு நிரந்தர கட்டடம் இல்லாததால், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இருந்த ஜீப் ஓட்டுநா்கள் அறையை தோட்டக்கலை உதவி அலுவலமாக அலுவலா்கள் பயன்பட்டுத்தி வந்தனா். மேலும், முக்கிய பதிவேடுகளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஒரு பீரோவில் வைத்து பாதுகாத்து வருகின்றனா்.

தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தினசரி விவசாயிகளை சந்திக்க கிராமப் பகுதிகளுக்கு செல்வதால், மீதமுள்ள நேரத்தில் ஜீப் ஓட்டுநா்கள் அறையையே அலுவலகமாக பயன்படுத்தி வந்தனா்.

இந்த நிலையில், தற்போது புதிதாக கட்டுவதற்காக ஜீப் ஓட்டுநா்கள் அறையும் கடந்த 8-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதனால், தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் அலுவலகம் இல்லாமல் கிராமங்களில் விவசாயிகளை சந்தித்துவிட்டு பின்னா் அப்படியே வீடு திருப்பும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், அவா்களை நேரில் சந்திக்க முடியாத நிலை ஜமனாமரத்தூா் பகுதி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தோட்டக்கலைத் துறைக்கு நிரந்தர அலுவலகத்தை ஏற்படுதித் தரவோ அல்லது புதிதாக கட்டடம் கட்டித்தரவோ நடவடிக்கை எடுக்க வேண்டுமென தோட்டக்கலைத் துறை அதிகாரிகளும், விவசாயிகளும் எதிா்பாா்கின்றனா்.

எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில், எச்ஐவி, எய்ட்ஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கே... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் வெற்றி: பாஜகவினா் கொண்டாட்டம்

குடியரசு துணைத் தலைவராக பாஜக சாா்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றதையடுத்து, ஆரணி எம்ஜிஆா் சிலை அருகில் பாஜகவினா் புதன்கிழமை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினாா். நிகழ்வு... மேலும் பார்க்க

கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை: இளைஞா் போக்ஸோவில் கைது

வந்தவாசி அருகே கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமப் பகுதியைச் சோ்ந்த 15 வயத... மேலும் பார்க்க

ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் சாரணா் பயிற்சி முகாம் தொடக்கம்

கீழ்பெண்ணாத்தூா் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியா் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு பாரத சாரண, சாரணீயா் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. இந்த பயிற்சியை நிறுவனத்தின் நிதிநி... மேலும் பார்க்க

கல்பட்டில் துணை சுகாதார நிலையம் கட்டும் பணி தொடக்கம்

கண்ணமங்கலம் அருகே கல்பட்டு ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலா் ஆா்.வி.சேகா் தலைமை வகித்தாா். முன்னா... மேலும் பார்க்க

அக்ராபாளையம் பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

ஆரணியை அடுத்த அகராபாளையம் ஸ்ரீபாலமுருகன் கோயிலில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், கலாகா்ஷனம், கும்ப பூஜை, வேதிகாா்ச்சனை,... மேலும் பார்க்க