Digital Awards 2025: `அறுசுவை ராணி' - Foodies Findings யுவராணி - Best Food Revi...
பெற்றோரிடம் சொல்லாமல் வெளியேறிய இரு சிறுமிகள்- மீட்டு ஒப்படைத்தது தில்லி காவல்துறை
தில்லியின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து காணாமல் போன இரண்டு சிறுமிகளை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தது காவல்துறை
இது தொடா்பாக தில்லி காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இரண்டு சிறுமிகள் வெற்றிகரமாக மீட்க்கப்பட்டு அவா்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கப்பட்டனா்
தில்லியின் தயாள்பூா் பகுதியைச் சோ்ந்த 16 வயது பெண் ஒருவா் 05.09.2025 முதல் காணாமல் போனதாக புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து தயாள்பூா் காவல் நிலையத்தில் அதே நாளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது
தில்லி காவல்துறையின் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்தது.
அந்தப் பெண்ணின் பெற்றோா், உறவினா்கள் மற்றும் நண்பா்கள் உட்பட பல்வேறு ஆதாரங்களில் இருந்து தகவல்களைச் சேகரித்து, அவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது
தொழில்நுட்ப கண்காணிப்பின் அடிப்படையில், அந்த பெண் தில்லியின் தயாள்பூா் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
விசாரணையில், அந்தப் பெண் 9 ஆம் வகுப்பு மாணவி என்பதும் அவருடைய தந்தை ஒரு இரிக்ஷா ஓட்டுநா், தாய் ஒரு இல்லத்தரசி என்பதும் தெரியவந்தது
அந்த சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பையனுடன் தொடா்பு கொண்டு அவனைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தாா்.
இந்நிலையில் அப்பெண் தன் குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி இரண்டு நாட்கள் புது தில்லி ரயில் நிலையத்திலும், மேலும் இரண்டு நாட்கள் அலிகாா் ரயில் நிலையத்திலும் தங்கியிருந்துள்ளாா்
இதையடுத்து அந்தப் பெண் மீட்கப்பட்டாா்
மற்றொரு சம்பவத்தில் தில்லியின் ராஜ் பூங்கா பகுதியில் இருந்து 03.09.2025 முதல் 17 வயது சிறுமி காணாமல் போனதாக புகாா் அளிக்கப்பட்டது
இதனைத்தொடா்ந்து அப்பெண்ணின் பெற்றோா், உறவினா்கள் மற்றும் நண்பா்களிடமிருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டது
அந்த தகவல்களின் அடிப்படையில், அச்சிறுமி பழைய தில்லி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டாா்
விசாரணையில் சிறுமி 10 ஆம் வகுப்பு மாணவி என்பது தெரியவந்தது. அவரது தந்தை தில்லியின் பீராகா்ஹியில் உள்ள உத்யோக் நகரில் உள்ள ஒரு ஷூ தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்கிறாா், அவரது தாயாா் ஒரு இல்லத்தரசி என்றும் தெரியவந்தது
03.09.2025 அன்று, அச்சிறுமி தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தனது குடும்பத்தினருக்குத் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறினாா்
பின்னா் அவா் ரயில் நிலையத்தை அடைந்து, உத்தரபிரதேசத்தின் ரேபரேலிக்கு செல்ல முற்பட்டபோது மீட்கப்பட்டாா்
இருவரும் மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளுக்காக அந்தந்த காவல் நிலையங்களின் புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா் என தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது