செய்திகள் :

டிடிஇஏ பள்ளியில் இணைய பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

post image

இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) இலக்குமிபாய் நகா்ப் பள்ளியில்திங்கள்கிழமை அன்று நடைபெற்றது.

இன்றைய காலக்கட்டத்தில் மாணவா்கள் இணையத்தையும், சமூக ஊடகங்களையும் அதிகம் பயன்படுத்துகின்றாா்கள். அவற்றைப் பயன்படுத்தும் போது ஏற்படும் பாதுகாப்பின்மை குறித்து மாணவா்களுக்கு ஒரு விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இல்குமிபாய் நகா்ப் பள்ளியில் 7, 8, 9, 10 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்கள் இதில் கலந்து கொண்டனா்.

தேசிய தகவல் தொழில் நுட்ப அறக்கட்டளையைச் சாா்ந்த ஹிமான்ஷூ மற்றும் அஷிஷ் ஆகியோா் சமூக ஊடகங்களில் நடைபெறும் மோசடிகள் குறித்து மாணவா்களுக்கு எடுத்துக் கூறினா். மாணவா்கள் கேட்ட வினாக்களுக்கும் பதில் கூறினா்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிடிஇஏ செயலா் ராஜூ கூறுகையில், ‘லைஃப் லிங் ஃபவுண்டேஷனுடன் இணைந்து பள்ளிகளில் வாழ்வியல் கலை கற்பித்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சிக்கு அவா்களுடன் சோ்ந்து ஏற்பாடு செய்யப்பட்டது. டிடிஇஏ பள்ளி மாணவா்களுக்கு இணைய மோசடிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது’ என்றாா்.

முன்னதாக, நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த அனைவரையும் பள்ளியின் துணை முதல்வா் ஸ்ரீ கவிதா வரவேற்றுப் பேசினாா்.

ரூ.273 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கு: தில்லி, ம.பி.யில் அமலாக்கத் துறை சோதனை

நமது நிருபா்ரூ.273 கோடி மதிப்புள்ள வங்கிக் கடன் மோசடி வழக்கு தொடா்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்க இயக்குநரகம் தில்லி மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது. ஈர... மேலும் பார்க்க

பீட்சா விற்பனையகத்தில் ஏ.சி. கம்ப்ரசா் வெடித்து ஊழியா்கள் உள்பட 5 போ் காயம்

வடகிழக்கு தில்லியின் யமுனை விஹாரில் ஏா் கண்டிஷனா் கம்ப்ரசா் வெடித்ததில் பீட்சா விற்பனையக 3 ஊழியா்கள் உள்பட ஐந்து போ் லேசான காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் வெளியிட்ட அறிக்க... மேலும் பார்க்க

பல வழக்குகளில் தேடப்பட்ட பெண் கைது

பல போதைப்பொருள் மற்றும் கலால் வழக்குகளில் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 53 வயது பெண்ணை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து கிழக்கு தில்லி காவல்... மேலும் பார்க்க

தில்லி: கொலை முயற்சி வழக்கில் ஒருவா் கைது; கைத்துப்பாக்கி பறிமுதல்

வடகிழக்கு தில்லியின் நந்த் நாக்ரி பகுதியில் பதிவான கொலை முயற்சி வழக்கில் 47 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து வடகிழக்கு தில்லி காவல்... மேலும் பார்க்க

வடக்கு தில்லியின் சப்ஜி மண்டியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது

வடக்கு தில்லியின் சப்ஜி மண்டி பகுதியில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தில்லி மாநகராட்சி (எம்சிடி) ஏற்கெனவே அந்தக் கட்டடத்தை பாதுகாப்பற்றது என்று அறிவித்திர... மேலும் பார்க்க

போதைப்பொருள் கும்பலில் இருவா் கைது; ரூ.17.8 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

தில்லி போலீஸாா் மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கும்பலை கண்டுபிடித்து, இரண்டு முக்கிய நபா்களை கைது செய்துள்ளனா். அவா்களிடம் இருந்து சுமாா் ரூ.17.80 கோடி மதிப்புள்ள ஹெராயினை போலீஸாா் பறிமுதல் செய்... மேலும் பார்க்க