செய்திகள் :

உளவுத்துறையில் வேலை வேண்டுமா?: டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

post image

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத் துறையில் காலியாக உள்ள 394 இளநிலை புலனாய்வு அலுவலர் பணிக்கு தகுதியும் ஆர்வமும் இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Intelligence Officer-II/Tech (JIO-II/Tech)

காலியிடங்கள்: 394 (SC-60, UR-157, EWS-32, OBC-117, ST-28)

சம்பளம் : மாதம் ரூ.25,500 - 81,100

வயது வரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், தகவல் தொழில்நுட்பம், கணினி பொறியியல், கம்பியூட்டர் அப்பிளிகேசன் போன்ற ஏதாவதொன்றி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது இயற்பியல், கணிதம் பிசிஏ, பி.எஸ்சி கணினி அறிவியல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 14.9.2025 தேதியின்படி கணக்கிடப்படும். வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும். விதவை பெண்களுக்கு அரசின் விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு தொடர்பான விபரங்கள் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி அடிப்படையில் General பிரிவு மற்றும் Mental Ability, General Science, English Communication, Reasoning போன்றவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். கணினியில் பணிபுரியும் திறன் பரிசோதிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, இடபுள்யுஎஸ், ஓபிசி பிரிவைச் சேர்ந்த ஆண்கள் ரூ.650. இதர பிரிவினர்கள் மற்றும் பெண்கள் ரூ 500 மட்டும் செலுத்த வேண்டும். கட்டணத்தை எஸ்பிஐ வங்கி செல்லானை பயன்படுத்தி ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mha.gov.in அல்லது www.ncs.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

விண் ணப்பித்தவுடன் அதன் பிரிண்ட் அவுட்டை டவுன்லோடு செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14. 9.2025

புதுச்சேரி காவல்துறையில் காவல் துணை ஆய்வாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

Online applications are invited from Indian nationals for direct recruitment to the post of Junior Intelligence Officer Grade-II/Tech i.e., JIO-II/Tech in the Intelligence Bureau, Government of India.

கடலூர் மாவட்ட நலவாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு!

கடலூர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் மாவட்ட சுகாதார அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள பணிகளை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலவாழ்வு கு... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..? அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வேலை!

நீலகிரி மாவட்டம், அருவங்காட்டில் உள்ள கார்பைட் வெடிமருந்து தொழிற்சாலையில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விபரம் வருமாறு:பணி: Tenure Based CPWLகாலியிடங்கள்: ... மேலும் பார்க்க

கிராம உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

தேனி மாவட்டத்தின் தேனி, போடிநாயக்கனூர், பெரியகுளம், உத்தமபாளையம் வட்டங்களில் உள்ள ஊராட்சி அலுவலகங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதிவாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வர... மேலும் பார்க்க

புதுச்சேரி காவல்துறையில் காவல் துணை ஆய்வாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

புதுச்சேரி காவல்துறையில் காலியாகவுள்ள காவல் துணை ஆய்வாளர் பணிக்கு தகுதியான ஆண் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்... மேலும் பார்க்க

சிறார் நீதிமன்றத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் சமூக சேவகர் பணிக்கு தகுதியான பெண் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி(குழந்தைகள் பராமரிப்பு மற்று... மேலும் பார்க்க

ஊக்கத் தொகையுடன் அா்ச்சகா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் ஊக்கத் தொகையுடன் அா்ச்சகா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி திருக்கோயில் சாா்பில் நடத்தப்படும் அா்ச்... மேலும் பார்க்க