செய்திகள் :

கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி தர மறுப்பு! இரு ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

post image

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி தர மறுத்த விவகாரத்தில் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கோவையில் காளிதாஸ் என்பவர், தனது 84 வயதான தந்தைக்கு சிகிச்சை மேற்கொள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவமனையினுள் அழைத்துச் செல்ல தனது தந்தைக்காக சக்கர நாற்காலியை மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது, அவர்கள் பணம் தந்தால் மட்டுமே தருவதாகக் கூறி, மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தனது தந்தையை காளிதாஸின் தோளில் சுமந்து அழைத்துச் சென்றுள்ளார். இதுதொடர்பான விடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், மருத்துவமனையில் போதிய சக்கர நாற்காலிகள் இருப்பதாகவும், ஊழியர்கள் பணம் கேட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் மருத்துவமனை முதல்வர் தெரிவித்தார்.

இந்த நிலையில், விசாரணை நடத்திய மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, சம்பந்தப்பட்ட மேற்பார்வையாளர்களான எஸ்தர் ராணி, மணிவாசகம் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 84 வயது முதியவருக்கு உரிய நேரத்தில் சக்கர நாற்காலி வழங்காத விவகாரத்தில் ஒப்பந்த ஊழியர்கள் இருவர் பணியிடை நீக்கம் சக்கர நாற்காலி வழங்காததால் தந்தையை மகன் கைத்தாங்கலாக இழுத்துச் செல்லும் வீடியோ வைரலாக பரவியதை அடுத்து நடவடிக்கை

கோவை அரசு மருத்துவமனையில், வீல்சேர் கிடைக்காததால், மகன் தனது தந்தையை தோளில் சுமந்து செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட தனது 84 வயது தந்தைக்கு சிகிச்சை அளிக்க வந்த காளிதாஸ், வீல்சேர் கேட்டபோது ஊழியர்கள் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, "வீடியோ தொடர்பாக விசாரணை நடக்கிறது. மருத்துவமனையில் போதுமான வீல்சேர்கள் உள்ளன. பணம் கேட்டதற்கான ஆதாரம் இல்லை," எனத் தெரிவித்தார்.

சரியத்தொடங்கியது மேட்டூர் அணை நீர்மட்டம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 9 நாட்களுக்குப் பிறகு சரியத் தொடங்கியது.கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி ந... மேலும் பார்க்க

சென்னையில் மிதமான மழை! அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை?

சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாள்கள் கடுமையான வெய்யில் இருந்து வந்த நிலையில் இன்று(புதன்கிழமை) மாலை பல பகுதிகளில் லேசான மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் இரவு வரை மழை நீடிக்கும்!

சென்னை, புறநகர் பகுதிகளில் இன்றிரவு வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.அடுத்த 2 மணி நேரத்துக்கு இன்று(செப். 10) மாலை 6 மணிக்குள்ளாக திருவள்ளூர், செங்கல... மேலும் பார்க்க

கம்பம் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்!

உத்தமபாளையம்: கம்பம் நகராட்சி நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் மொத... மேலும் பார்க்க

குமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு

கன்னியாகுமரியில் கண்ணாடி இழை பாலத்தில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்டுவிட்டதாக அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார். சுத்தியல் கீழே விழுந்ததில் பாலத்தில் சிறு கீறல் ஏற்பட்டதாகவும் அது தற்போது சரிசெய்யப்பட்... மேலும் பார்க்க

கட்சி இணைந்தால் இபிஎஸ்ஸை முதல்வர் வேட்பாளராக ஏற்பீர்களா? - ஓபிஎஸ் பதில்

கட்சியை ஒன்றிணைக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெறும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்... மேலும் பார்க்க