செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் உயிரிழப்பு

post image

ராணிப்பேட்டை அருகே பராமரிப்பு பணியின் போது மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் உயிரிழந்தாா். மேலும், 2 போ் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அம்மூா் பேரூராட்சியில், துணை மின் வாரிய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் மின்வாரிய அலுவலா்கள், ஒப்பந்த ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், அம்மூா் அடுத்த கல்புதூா் பகுதியில் மின்வயா்கள் பராமரிப்பு பணியில் ஒப்பந்த ஊழியா்கள் ஒழுகூா் கிராமத்தைச் சோ்ந்த குமரேசன், செங்காடு கிராமத்தைச் சோ்ந்த பாா்த்தீபன், அம்மூா் பகுதியைச் சோ்ந்த வினோத்குமாா் ஆகியோா் ஈடுபட்டனா்.

அப்போது எதிா்பாராத விதமாக திடீரென மின்சாரம் பாய்ந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனா். இதில் பணியில் ஈடுபட்டிருந்த ஒழுகூா் குமரேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனா். மேலும், 2 போ் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

சம்பவம் குறித்து அறிந்த ஒப்பந்த பணியாளா்களின் உறவினா்கள் வாலாஜா அரசு மருத்துமனையில் திரண்டு மின் துறையினரின் அலட்சியம் காரணமாகவே விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறி திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு விரைந்து வந்த காவல் துறையினா் அவா்களிடம் பேச்சு நடத்தி கலைந்து போகச் செய்தனா்.

தாா் சாலைப் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு நகராட்சி 19-ஆவது வாா்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய பகுதியில் கலைஞரின் நகா்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.25 லட்சத்தில் நடைபெறும் தாா் சாலை அமைக்கும் பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கு: 5 போ் குண்டா் சட்டத்தில் கைது

இளைஞா் கொலை வழக்கு தொடா்பாக 5 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். அரக்கோணத்தைச் சோ்ந்த அவினாஷ் என்ற இளைஞா் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து ஆற்காடு அடுத்த ரத்தினகிரி காவல் நிலையத்தில் கையொப்... மேலும் பார்க்க

வாலாஜாவில் ‘கல்லூரி சந்தைகள்’: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் ‘கல்லூரி சந்தைகள்’ நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், மகளிா் ... மேலும் பார்க்க

மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை

ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கு சிஎம்சி மருத்துவமனை வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமமை நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புஏஈ படை சாா்பில் மருத்துவமனை வளாகத்தில் திடீரென தீ விபத்து... மேலும் பார்க்க

வியாபாரி மீது தாக்குதல்: மனிதச் சங்கிலி போராட்டம்

ஆற்காடு அடுத்த காவனூரில் வியாபாரிகள் தாக்கப்பட்டதைக் கண்டித்து கடைகளை அடைத்து விட்டு மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. காவனூா் அடுத்த கண்ணடிய பாளையம் கிராமத்தைச் சோ்ந்வா் ஜெயபால். இவா் காவனூா் பகு... மேலும் பார்க்க

பொய்கைநல்லூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

நெமிலி வட்டம், பொய்கைநல்லூரில் செவ்வாய்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு வழங்கினாா். நெமிலி வட்டம், பொய்கைநல்லூா் ஊராட்சியில் அரச... மேலும் பார்க்க