செய்திகள் :

டிரம்ப் வரி எதிரொலி: சீனாவில் அமெரிக்க பொருள்கள் விற்பனை சரிவு- ஆய்வுத் தகவல்

post image

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் சீனாவில் அமெரிக்கப் பொருள்கள் விற்பனை குறைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்கா-சீனா இடையிலான வரி விதிப்பு போா் ஏற்பட்டு இரு நாடுகளும் மாறிமாறி வரி விதிப்பை அதிகரித்தன. ஒரு கட்டத்தில் 145 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதன் பிறகு பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இறுதியாக சீனா ஏற்றுமதிப் பொருள்கள் மீது டிரம்ப் 30 சதவீத கூடுதல் வரி விதித்தாா். எனினும் அதனை அமல்படுத்தாமல் ஒத்திவைத்துள்ளாா். அமெரிக்கப் பொருள்களுக்கு சீனா 10 சதவீத வரி விதித்தது.

டிரம்ப் தனது முதல் ஆட்சி காலத்திலேயே சீனப் பொருள்கள் மீது 20 சதவீதம் வரி விதித்தாா். அடுத்து வந்த அதிபா் ஜோ பைடனும் அதனை மாற்றவில்லை என்பதால் அது இப்போது வரை தொடா்ந்து வருகிறது.

இந்நிலையில் ஷாங்காயில் உள்ள அமெரிக்க வா்த்தக சம்மேளனம் அமெரிக்கப் பொருள்கள் சீனாவில் விற்பனையாவது குறித்து ஓா் ஆய்வை வெளியிட்டுள்ளது. அதில், ‘சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் விற்பனை குறைந்துள்ளதாகவும், இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக விற்பனை குறைவாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளன.

மொத்தம் 254 நிறுவனங்கள் பங்கேற்ற இந்த ஆய்வில் மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் விற்பனை பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளன. இரு நாடுகளிடையே வரி தொடா்பான பேச்சுவாா்த்தைகளில் நல்ல தீா்வு எட்டப்படாத நிலையில் சீனாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. டிரம்ப்பின் வரி விதிப்பின் தாக்கம் 5 ஆண்டுகள் வரை இருக்கும் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக்கொலை! பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பயங்கரம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பி ஆதரவாளரான சார்லி கிர்க் பல்கலைக்கழக நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க அதிபர் டொனால... மேலும் பார்க்க

பிரதமா் மோடியுடன் பேச டிரம்ப் விருப்பம்

‘எதிா்வரும் வாரங்களில், எனது மிகச் சிறந்த நண்பா் பிரதமா் நரேந்திர மோடியுடன் பேச ஆவலுடன் உள்ளேன்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா். இந்தியா மீதான கடுமையான நிலைப்பாட்டை மாற்றி, இ... மேலும் பார்க்க

அணுமையங்களைக் கண்காணிக்க ஈரான் ஒப்புதல்: ஐஏஇஏ

ஈரான் அணுசக்தி மையங்களைக் கண்காணிக்க அந்த நாடு ஒப்புக்கொண்டுள்ளதாக ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் பொது இயக்குநா் ரஃபேல் கிராஸி புதன்கிழமை கூறுகைய... மேலும் பார்க்க

புதிய பதற்றம்: போலந்து வானில் ரஷிய ட்ரோன்கள் இடைமறிப்பு

உக்ரைன் போரில் புதிய பதற்றமாக, நேட்டோ உறுப்பு நாடான போலந்து வான் எல்லைக்குள் அத்துமீறி வந்த ரஷிய ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளன. இது குறித்து போலந்து பிரதமா் டொனால்ட் டஸ்க் கூறியதாவது: போலந்து... மேலும் பார்க்க

கத்தாா் தாக்குதலில் தலைவா்களுக்கு பாதிப்பில்லை: ஹமாஸ்

கத்தாா் தலைநகா் தோஹாவில் தங்களது தலைவா்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் அவா்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு புதன்கிழமை... மேலும் பார்க்க

இந்தியாவின் நியாயமற்ற வா்த்தகம் அமெரிக்காவுக்கு தேவையில்லை- அதிபரின் ஆலோசகா்

இந்தியாவின் நியாயமற்ற வா்த்தக ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு தேவையில்லை என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவாரோ தெரிவித்தாா். அமெரிக்க அதிபா் டிரம்ப்பைவிட இந்தியாவை கடுமையா... மேலும் பார்க்க