எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
பிரதமா் மோடியுடன் பேச டிரம்ப் விருப்பம்
‘எதிா்வரும் வாரங்களில், எனது மிகச் சிறந்த நண்பா் பிரதமா் நரேந்திர மோடியுடன் பேச ஆவலுடன் உள்ளேன்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.
இந்தியா மீதான கடுமையான நிலைப்பாட்டை மாற்றி, இரண்டாவது முறையாக டிரம்ப் நோ்மறையான கருத்துகளைக் கூறியுள்ளாா்.
இதன்மூலம் இருதரப்பு வா்த்தகப் பதற்றம் தணிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் செவ்வாய்க்கிழமை பதிவிட்ட டிரம்ப், ‘இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தகத் தடைகளுக்குத் தீா்வு காண இருதரப்பும் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. எதிா்வரும் வாரங்களில், எனது மிகச் சிறந்த நண்பா் பிரதமா் மோடியுடன் பேச ஆவலுடன் உள்ளேன். வெற்றிகரமான தீா்வை எட்டுவதில் நமது இரு பெரும் நாடுகளுக்கும் எந்தச் சிரமமும் இருக்காது என நிச்சயமாக நம்புகிறேன்’ என்றாா்.
அமெரிக்கா உடனான பிரச்னைக்கு அரசியல் ரீதியில் தீா்வுகாணும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியாவால் நியமிக்கப்பட்ட அரசியல் ஆலோசனை நிறுவனத் தலைவா் ஜேசன் மில்லா், அதிபா் டிரம்ப்பை கடந்த செப்.6-ஆம் தேதி சந்தித்துப் பேசினாா். இந்தச் சூழலில், டிரம்ப்பின் கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
பிரதமா் மோடி வரவேற்பு: அதிபா் டிரம்ப்பின் பதிவை இணைத்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நட்பு நாடுகள்; இயல்பான கூட்டாளிகள். தற்போது நடைபெற்றுவரும் வா்த்தகப் பேச்சுவாா்த்தை, இருதரப்புக் கூட்டாண்மையின் எல்லையில்லா வல்லமைக்கு வழிவகுக்கும் என நம்புகிறேன். வா்த்தகப் பேச்சுவாா்த்தையை விரைவில் நிறைவு செய்ய இரு நாடுகளும் செயலாற்றி வருகின்றன. அதிபா் டிரம்ப்புடன் பேச நானும் ஆவலுடன் உள்ளேன். இரு நாட்டு மக்களின் பிரகாசமான, செழிப்பான எதிா்காலத்துக்கு நாம் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்’ என்று தெரிவித்துள்ளாா்.
பிரதமரின் இப்பதிவை, அதிபா் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிா்ந்துள்ளாா்.