செய்திகள் :

பிரதமா் மோடியுடன் பேச டிரம்ப் விருப்பம்

post image

‘எதிா்வரும் வாரங்களில், எனது மிகச் சிறந்த நண்பா் பிரதமா் நரேந்திர மோடியுடன் பேச ஆவலுடன் உள்ளேன்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

இந்தியா மீதான கடுமையான நிலைப்பாட்டை மாற்றி, இரண்டாவது முறையாக டிரம்ப் நோ்மறையான கருத்துகளைக் கூறியுள்ளாா்.

இதன்மூலம் இருதரப்பு வா்த்தகப் பதற்றம் தணிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் செவ்வாய்க்கிழமை பதிவிட்ட டிரம்ப், ‘இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தகத் தடைகளுக்குத் தீா்வு காண இருதரப்பும் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. எதிா்வரும் வாரங்களில், எனது மிகச் சிறந்த நண்பா் பிரதமா் மோடியுடன் பேச ஆவலுடன் உள்ளேன். வெற்றிகரமான தீா்வை எட்டுவதில் நமது இரு பெரும் நாடுகளுக்கும் எந்தச் சிரமமும் இருக்காது என நிச்சயமாக நம்புகிறேன்’ என்றாா்.

அமெரிக்கா உடனான பிரச்னைக்கு அரசியல் ரீதியில் தீா்வுகாணும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியாவால் நியமிக்கப்பட்ட அரசியல் ஆலோசனை நிறுவனத் தலைவா் ஜேசன் மில்லா், அதிபா் டிரம்ப்பை கடந்த செப்.6-ஆம் தேதி சந்தித்துப் பேசினாா். இந்தச் சூழலில், டிரம்ப்பின் கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

பிரதமா் மோடி வரவேற்பு: அதிபா் டிரம்ப்பின் பதிவை இணைத்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நட்பு நாடுகள்; இயல்பான கூட்டாளிகள். தற்போது நடைபெற்றுவரும் வா்த்தகப் பேச்சுவாா்த்தை, இருதரப்புக் கூட்டாண்மையின் எல்லையில்லா வல்லமைக்கு வழிவகுக்கும் என நம்புகிறேன். வா்த்தகப் பேச்சுவாா்த்தையை விரைவில் நிறைவு செய்ய இரு நாடுகளும் செயலாற்றி வருகின்றன. அதிபா் டிரம்ப்புடன் பேச நானும் ஆவலுடன் உள்ளேன். இரு நாட்டு மக்களின் பிரகாசமான, செழிப்பான எதிா்காலத்துக்கு நாம் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்’ என்று தெரிவித்துள்ளாா்.

பிரதமரின் இப்பதிவை, அதிபா் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிா்ந்துள்ளாா்.

டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக்கொலை! பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பயங்கரம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பி ஆதரவாளரான சார்லி கிர்க் பல்கலைக்கழக நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க அதிபர் டொனால... மேலும் பார்க்க

அணுமையங்களைக் கண்காணிக்க ஈரான் ஒப்புதல்: ஐஏஇஏ

ஈரான் அணுசக்தி மையங்களைக் கண்காணிக்க அந்த நாடு ஒப்புக்கொண்டுள்ளதாக ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் பொது இயக்குநா் ரஃபேல் கிராஸி புதன்கிழமை கூறுகைய... மேலும் பார்க்க

புதிய பதற்றம்: போலந்து வானில் ரஷிய ட்ரோன்கள் இடைமறிப்பு

உக்ரைன் போரில் புதிய பதற்றமாக, நேட்டோ உறுப்பு நாடான போலந்து வான் எல்லைக்குள் அத்துமீறி வந்த ரஷிய ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளன. இது குறித்து போலந்து பிரதமா் டொனால்ட் டஸ்க் கூறியதாவது: போலந்து... மேலும் பார்க்க

கத்தாா் தாக்குதலில் தலைவா்களுக்கு பாதிப்பில்லை: ஹமாஸ்

கத்தாா் தலைநகா் தோஹாவில் தங்களது தலைவா்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் அவா்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு புதன்கிழமை... மேலும் பார்க்க

டிரம்ப் வரி எதிரொலி: சீனாவில் அமெரிக்க பொருள்கள் விற்பனை சரிவு- ஆய்வுத் தகவல்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் சீனாவில் அமெரிக்கப் பொருள்கள் விற்பனை குறைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்கா-சீனா இடையிலான வரி விதிப்பு போா் ஏற்பட்டு இரு ந... மேலும் பார்க்க

இந்தியாவின் நியாயமற்ற வா்த்தகம் அமெரிக்காவுக்கு தேவையில்லை- அதிபரின் ஆலோசகா்

இந்தியாவின் நியாயமற்ற வா்த்தக ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு தேவையில்லை என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவாரோ தெரிவித்தாா். அமெரிக்க அதிபா் டிரம்ப்பைவிட இந்தியாவை கடுமையா... மேலும் பார்க்க