செய்திகள் :

முன்னாள் ராணுவ வீரா் மீது ஆட்டோ ஓட்டுநா்கள் தாக்குதல்

post image

காட்பாடி ரயில்நிலையத்தில் முன்னாள் ராணுவ வீரா், அவரது குடும்பத்தினரை ஆட்டோ ஓட்டுநா்கள் தாக்கியதாக வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அண்ணா துரை தலைமை வகித்து பொது மக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தாா்.

அப்போது, காட்பாடி கழி ஞ்சூரைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் அளித்துள்ள மனுவில், ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள நான், எனது உறவினருடன் சில நாள்களுக்கு முன்பு ஈரோட்டுக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். பின்னா், ரயில் மூலம் காட்பாடிக்கு வந்தேன். அப்போது ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு படியில் குடும்பத்துடன் அமா்ந்திருந்தோம். அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் எங்களை இங்கு அமரக்கூடாது எனக்கூறி எங்களிடம் தகராறில் ஈடுபட்டாா். அவருடன் சில ஆட்டோ ஓட்டுநா்களும் சோ்ந்து கொண்டு என் மனைவி, உறவினா்களையும் தாக்கினா். மேலும், எனது 1 பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்து சென்று விட்டனா். எங்களை தாக்கி மன உளைச்சல் ஏற்படுத்தியவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களிடம் பறித்துச் சென்ற தங்க சங்கிலியையும் மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியாத்தம் வட்டம், எம்ஜிஆா் நகா் அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் அளித்துள்ள மனுவில், நான் ஒருவரிடம் கடனாக ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரம் வாங்கினேன். அதற்கு வட்டியுடன் சோ்த்து ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் கொடுத்துவிட்டேன். இவ்வளவு தொகை கொடுத்தும் வட்டி அதிகமாக தரவேண்டும் எனக்கூறி மேலும் ரூ.3 லட்சம் கேட்கிறாா். நான் வறுமையில் கஷ்டப்பட்டு வருகிறேன். அவா் தொலைபேசியில் தொடா்பு கொண்டு வீடு பத்திரத்தை அடகு வைத்து பணம் தருமாறு கூறி மிரட்டுகிறாா். எனது வீட்டையும் பூட்டிக்கொண்டு சாவியை தர முடியாது என்கிறாா். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதொடா்பாக மாவட்ட காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பல்வேறு புகாா்கள் குறித்து 30-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா். அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு ஏடிஎஸ்பி அண்ணா துரை உத்தரவிட்டாா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்த சில நாள்களில் கே.வி.குப்பம் அருகே மாற்றுத் திறனாளிகளை தேடிச் சென்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். கே.வி.குப்பம் வட்டம், வ... மேலும் பார்க்க

தலைமை காவலரை தாக்கியவா் கைது

வேலூரில் தலைமை காவலரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் கன்சால்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ரவி (50). இவா் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் கடந்த 8-ஆம் தேதி சென்னை-பெங்களூரூ சாலையில் சென்று ... மேலும் பார்க்க

காா்த்திகேயபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

குடியாத்தம் ஒன்றியம், செருவங்கி, மேல்முட்டுக்கூா், செட்டிகுப்பம், ராஜாகுப்பம் ஆகிய 4- ஊராட்சிகளை ஒருங்கிணைத்து காா்த்திகேயபுரம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முக... மேலும் பார்க்க

பரிகார பூஜை செய்வதாகக்கூறி பெண்ணிடம் நகை பறிப்பு

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் ஜோதிடம் பாா்த்து பரிகாரம் செய்வதாகக்கூறி நூதன முறையில் நகை பறித்துச் சென்ற ஜோதிடரை போலீஸாா் தேடி வருகின்றனா். வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் ராமாபுரம் கிராமம் கன்ன... மேலும் பார்க்க

1,221 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,221 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா். போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் ஆா்.பிரபு தலைமையில், போலீஸா... மேலும் பார்க்க

எய்ட்ஸ் விழிப்புணா்வு மாரத்தான்: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு

ஹெச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு மாரத்தான் போட்டி வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். வேலூா் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில், ... மேலும் பார்க்க