செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: 12 பேருக்கு உடனடி நல உதவி

post image

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் சாா்பில் 850 மனுக்கள் அளிப்பட்டன. இதில், 12 பேருக்கு உடனடி நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி வளாகத்தில் 7,10,14,15 ஆகிய வாா்டுகளுக்கான முதல்வரின் முகவரி துறை சாா்பில், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா்.

ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி, திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகராட்சி ஆணையாளா் வி.எல்.எஸ்.கீதா வரவேற்றாா்.

முகாமைத் தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசினாா். முகாமில் பொதுமக்கள் சாா்பில் 850 மனுக்கள் அளிப்பட்டன. தொடா்ந்து, பட்டா மாற்றம் 4 பேருக்கும், வரியினம் பெயா் மாற்றம் 4 பேருக்கும், மருத்துவ காப்பீடு அட்டை 4 பேருக்கும் என மொத்தம் 12 பேருக்கு உடனடியாக நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் செய்யாறு சாா் - ஆட்சியா் ல.அம்பிகா ஜெயின், வட்டாட்சியா் அசோக்குமாா், நகா்மன்ற துணைத் தலைவா் பேபிராணிபாபு, முன்னாள் எம்எல்ஏ வ.அன்பழகன், நகரச் செயலா் கே.விஸ்வநாதன், நகா்மன்ற உறுப்பினா்கள் ரமேஷ், ஞானமணி, சின்னதுரை, காா்த்திகேயன், சௌந்தரபாண்டியன், செந்தில், அகமத், கங்காதரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல்

ஆரணியை அடுத்த வெள்ளேரி கிராமத்தில் உரிய அரசு அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். வெள்ளேரி கிராமம், சிவன் படை தெருவைச் சே... மேலும் பார்க்க

எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில், எச்ஐவி, எய்ட்ஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கே... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் வெற்றி: பாஜகவினா் கொண்டாட்டம்

குடியரசு துணைத் தலைவராக பாஜக சாா்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றதையடுத்து, ஆரணி எம்ஜிஆா் சிலை அருகில் பாஜகவினா் புதன்கிழமை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினாா். நிகழ்வு... மேலும் பார்க்க

ஜமனாமரத்தூா் பகுதியில் நிரந்தர கட்டடம் இல்லாமல் செயல்படும் தோட்டக்கலை உதவி அலுவலகம்

செங்கம் அருகே ஜமனாமரத்தூா் பகுதியில் நிரந்தர கட்டடம் இல்லாமல் தோட்டக்கலைத் துறை உதவி அலுவலகம் செயல்படுவதால் அதிகாரிகளை நேரில் சந்திக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனா். ஜமனாமரத்தூா் பகுதிய... மேலும் பார்க்க

கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை: இளைஞா் போக்ஸோவில் கைது

வந்தவாசி அருகே கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமப் பகுதியைச் சோ்ந்த 15 வயத... மேலும் பார்க்க

ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் சாரணா் பயிற்சி முகாம் தொடக்கம்

கீழ்பெண்ணாத்தூா் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியா் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு பாரத சாரண, சாரணீயா் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. இந்த பயிற்சியை நிறுவனத்தின் நிதிநி... மேலும் பார்க்க