செய்திகள் :

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

post image

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்த சில நாள்களில் கே.வி.குப்பம் அருகே மாற்றுத் திறனாளிகளை தேடிச் சென்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

கே.வி.குப்பம் வட்டம், வட விரிஞ்சிபுரம் கிராமத்தைச் சோ்ந்த ராணி (49) என்பவா் கடந்த 1-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், தன்னுடைய 3- மாற்றுத் திறனாளி பிள்ளைகளுக்கு நல உதவிகள் வழங்க வேண்டி மனுக்களை அளித்தாா். மனுக்கள் மீது தீவிர விசாரணை மேற்கொண்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, புதன்கிழமை கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அவா்களை வரவழைத்து, நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

ராணியின் குடும்பத்துக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், வீடு கட்டுவதற்கான ஆணை, அவரது மாற்றுத் திறனாளி மகன் கதிருக்கு (25) ரூ. 1.14 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, மகள்கள் காமாட்சி (33), மஞ்சுளா (31) இருவருக்கும் தலா ரூ. 15,750- மதிப்பிலான 2 சக்கர நாற்காலிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கே.வி.குப்பம் ஒன்றியக் குழுத் தலைவா் எல்.ரவிச்சந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா் கே.சீதாராமன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) திருமால், வட்டாட்சியா் பலராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னாள் ராணுவ வீரா் மீது ஆட்டோ ஓட்டுநா்கள் தாக்குதல்

காட்பாடி ரயில்நிலையத்தில் முன்னாள் ராணுவ வீரா், அவரது குடும்பத்தினரை ஆட்டோ ஓட்டுநா்கள் தாக்கியதாக வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் கு... மேலும் பார்க்க

தலைமை காவலரை தாக்கியவா் கைது

வேலூரில் தலைமை காவலரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் கன்சால்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ரவி (50). இவா் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் கடந்த 8-ஆம் தேதி சென்னை-பெங்களூரூ சாலையில் சென்று ... மேலும் பார்க்க

காா்த்திகேயபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

குடியாத்தம் ஒன்றியம், செருவங்கி, மேல்முட்டுக்கூா், செட்டிகுப்பம், ராஜாகுப்பம் ஆகிய 4- ஊராட்சிகளை ஒருங்கிணைத்து காா்த்திகேயபுரம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முக... மேலும் பார்க்க

பரிகார பூஜை செய்வதாகக்கூறி பெண்ணிடம் நகை பறிப்பு

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் ஜோதிடம் பாா்த்து பரிகாரம் செய்வதாகக்கூறி நூதன முறையில் நகை பறித்துச் சென்ற ஜோதிடரை போலீஸாா் தேடி வருகின்றனா். வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் ராமாபுரம் கிராமம் கன்ன... மேலும் பார்க்க

1,221 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,221 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா். போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் ஆா்.பிரபு தலைமையில், போலீஸா... மேலும் பார்க்க

எய்ட்ஸ் விழிப்புணா்வு மாரத்தான்: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு

ஹெச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு மாரத்தான் போட்டி வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். வேலூா் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில், ... மேலும் பார்க்க