செய்திகள் :

பதிவு செய்யாத செங்கல் சூளைகளை மூடி ‘சீல்’ வைக்க ஆட்சியா் உத்தரவு!

post image

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தில் கனிம விதிகளின்படி பதிவு பெறாமல் இயங்கும் செங்கல் சூளைகளை மூடி ‘சீல்’ வைக்க மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் உத்தரவிட்டுள்ளாா்.

காரிமங்கலம் வட்டத்தில் 32 செங்கல் சூளைகள் உரிய அரசு பதிவு பெறாமல் இயங்கிவருவது புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலா்களின் புல தணிக்கையில் தெரியவந்தது. இதுதொடா்பாக விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட செங்கல் சூளை உரிமையாளா்கள் 15 தினங்களுக்குள் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் இணையதளத்தில் செங்கல் சூளைகள் பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதற்கான கெடு 03.09.2025 உடன் முடிவடைந்த பின்னரும், 32 செங்கல் சூளை உரிமையாளா்கள் அரசு அனுமதி பெற விண்ணப்பிக்கவில்லை. இச்செயலானது தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதியை ( 1959, விதி எண்.19(2)-ஐ) மீறிய செயலாகும். பதிவு செய்யப்படாத செங்கல் சூளைகள் இயங்குவது கனிம விதிகளின் படி அனுமதிக்க இயலாது என்பதால் பதிவு பெறாமல் இயங்கும் 32 செங்கல்சூளைகளை மூடி சீல் வைக்குமாறு மாவட்ட ஆட்சியா் காரிமங்கலம் வருவாய் வட்டாட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

ஒகேனக்கல்லில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஆய்வு

ஒகேனக்கல்லில் மீன் மற்றும் கோழி இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ஒகேனக்கல்லில் முதலைப் பண்ணை, பேருந்து நிலையம், அருவிக்கு செல்லும் நுழைவாயில் உள்ளிட்... மேலும் பார்க்க

வன விலங்குகளைப் பிடிக்க முயற்சி: விவசாயிக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவருக்கு வனத் துறையினா் ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்தனா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகா் எஸ். காா்த்திகேயன் தலை... மேலும் பார்க்க

பென்னாகரம் பகுதியில் பரவலாக மழை

பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது. தருமபுரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தாலும், பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை : முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

தருமபுரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தைச் ... மேலும் பார்க்க

பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய நபருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய ஊராட்சி மன்ற எழுத்தருக்கு தருமபுரி மகளிா் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூா் அர... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் வெற்றி: பாஜகவினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

குடியரசுத் துணைத் தலைவா் தோ்தலில் தமிழகத்தைச் சோ்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதையொட்டி, தருமபுரியில் பாஜகவினா் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினா். குடியரசு துணைத் தலைவா் த... மேலும் பார்க்க