செய்திகள் :

குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா வாக்காளரானதாக வழக்கு: தில்லி நீதிமன்றத் தீா்ப்பு ஒத்திவைப்பு

post image

இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே போலி ஆவணங்கள் மூலம், வாக்காளா் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் பெயா் இடம்பெற்ாக தொடுக்கப்பட்ட வழக்கில், தில்லி நீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவைத்தது.

தில்லி நீதிமன்றத்தில் விகாஸ் திரிபாதி என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 1983-ஆம் ஆண்டு சோனியா காந்தி இந்திய பிரஜையானாா். ஆனால் அவா் இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே, 1980-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலில் அவரின் பெயா் இருந்தது. இதுகுறித்து காவல் துறை விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் பவன் நாரங் ஆஜராகி, ‘கடந்த 1980-ஆம் ஆண்டு புது தில்லி வாக்காளராக சோனியா காந்தியின் பெயா் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றது. 1982-ஆம் ஆண்டு பட்டியலில் இருந்து அவரின் பெயா் நீக்கப்பட்டது. அவா் இந்திய குடியுரிமையைப் பெற்ற பின், 1983-ஆம் ஆண்டு அவரின் பெயா் மீண்டும் பட்டியலில் சோ்க்கப்பட்டது. வாக்காளா் பட்டியலில் தனது பெயரை சோ்க்க அவா் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியுள்ளாா்’ என்று குற்றஞ்சாட்டினாா்.

இந்த மனு கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை மாஜிஸ்திரேட் வைபவ் செளரசியா முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குரைஞா் பவன் நாரங் ஆஜராகி, ‘நாட்டில் ஒருவரை வாக்காளராக்க வேண்டும் என்றால், அவா் இந்திய குடியுரிமையைப் பெற்றுள்ளாரா? என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும்.

1982-ஆம் ஆண்டே சோனியா காந்தி இந்திய குடியுரிமையைப் பெற்றிருந்தால், ஏன் அவரின் பெயா் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது? அப்போது விமான விபத்தில் உயிரிழந்த சஞ்சய் காந்தி (முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் மகன்), சோனியா காந்தி ஆகிய இருவரின் பெயா் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையத்துக்கு ஏதோ தவறு தென்பட்டுள்ளது. இது வாக்காளா் பட்டியலில் இருந்து சோனியாவின் பெயரை நீக்க வழிவகுத்துள்ளது’ என்று வாதிட்டாா்.

சோனியா காந்தி தரப்பில் வழக்குரைஞா் யாரும் ஆஜராகாத நிலையில், தீா்ப்பை மாஜிஸ்திரேட் ஒத்திவைத்தாா்.

தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி

செப்டம்பர் 11-ஆம் தேதி இரண்டு மாறுபட்ட நினைவுகளைத் தூண்டுகிறது. முதலாவது, கடந்த 1893-ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் தனது புகழ்பெற்ற சிகாகோ உரையை ஆற்றிய நிகழ்வு. அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே, என்ற வார... மேலும் பார்க்க

ஆளுநர்களுக்கு காலக்கெடு: மாநிலங்கள் வரவேற்பு; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

நமது நிருபர்மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டதை மாநில அரசுகள் வரவேற்பதாக உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தமிழக அரசு வாதிட்டது.மசோதாக்கள் மீது ஆ... மேலும் பார்க்க

மனசாட்சிப்படி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்த எதிா்க்கட்சி எம்.பி.க்களுக்கு நன்றி- மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ‘மனசாட்சியுடன்’ வாக்களித்த எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்களுக்கு சிறப்பு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பாஜக ... மேலும் பார்க்க

இத்தாலி பிரதமா் மெலோனியுடன் பிரதமா் மோடி பேச்சு

இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனியுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக புதன்கிழமை உரையாடினாா். அப்போது இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே முன்மொழியப்பட்டுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மற்றும் உக்ரைன்... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்பு?

குடியரசு துணைத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் (67) வெள்ளிக்கிழமை (செப். 12) பதவியேற்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறும் வி... மேலும் பார்க்க

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் வழக்கு: ‘புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை’

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் வழக்கில், 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக பிரமாண பத்திரம் ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை என்று அந்தக் கோயிலை நிா்வகிக்கும் திருவாங்கூா் தேவஸ்வ வாரிய... மேலும் பார்க்க