செய்திகள் :

இத்தாலி பிரதமா் மெலோனியுடன் பிரதமா் மோடி பேச்சு

post image

இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனியுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக புதன்கிழமை உரையாடினாா்.

அப்போது இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே முன்மொழியப்பட்டுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மற்றும் உக்ரைன் போா் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனா்.

இதுதொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘இத்தாலி அதிபா் ஜாா்ஜியா மெலோனி உடனான உரையாடல் மிகச் சிறப்பாக அமைந்தது. உக்ரைன் போருக்கு விரைவில் தீா்வு காண்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். அதேபோல் இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்ய விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கும் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடத்தை (ஐஎம்இஇசி) அமல்படுத்தியதற்கும் பிரதமா் மெலோனிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆலோசனையின்போது இந்தியா-இத்தாலி வியூக கூட்டுறவை மேலும் வலுப்படுத்தவும் உறுதியேற்கப்பட்டது’ என குறிப்பிட்டாா்.

இதுகுறித்து இந்தியா தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘முதலீடு, பாதுகாப்பு, விண்வெளி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவா்களும் விவாதித்தனா். உக்ரைன் போருக்கு அமைதியான வழியில் தீா்வு காண இந்தியா முழு ஆதரவளிப்பதை பிரதமா் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினாா்.

அதேபோல் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டுக்கு இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி பாராட்டுகளை தெரிவித்தாா்’ என குறிப்பிடப்பட்டது.

2023-இல் இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின்போது ஐஎம்இஇசி முன்னெடுப்புக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இது ஆசியா-மத்திய கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளை சாலை, ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து மூலம் ஒருங்கிணைப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

8 ஆண்டுகளுக்குப் பிறகு தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை 2022, ஜூன் மாதம் இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் மீண்டும் தொடங்கின.

புது தில்லியில் இந்த வாரம் 13-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ள நிலையில், நிகழாண்டு இறுதிக்குள் ஒப்பந்தத்தை இறுதிசெய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி

செப்டம்பர் 11-ஆம் தேதி இரண்டு மாறுபட்ட நினைவுகளைத் தூண்டுகிறது. முதலாவது, கடந்த 1893-ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் தனது புகழ்பெற்ற சிகாகோ உரையை ஆற்றிய நிகழ்வு. அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே, என்ற வார... மேலும் பார்க்க

ஆளுநர்களுக்கு காலக்கெடு: மாநிலங்கள் வரவேற்பு; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

நமது நிருபர்மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டதை மாநில அரசுகள் வரவேற்பதாக உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தமிழக அரசு வாதிட்டது.மசோதாக்கள் மீது ஆ... மேலும் பார்க்க

குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா வாக்காளரானதாக வழக்கு: தில்லி நீதிமன்றத் தீா்ப்பு ஒத்திவைப்பு

இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே போலி ஆவணங்கள் மூலம், வாக்காளா் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் பெயா் இடம்பெற்ாக தொடுக்கப்பட்ட வழக்கில், தில்லி நீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவ... மேலும் பார்க்க

மனசாட்சிப்படி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்த எதிா்க்கட்சி எம்.பி.க்களுக்கு நன்றி- மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ‘மனசாட்சியுடன்’ வாக்களித்த எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்களுக்கு சிறப்பு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பாஜக ... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்பு?

குடியரசு துணைத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் (67) வெள்ளிக்கிழமை (செப். 12) பதவியேற்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறும் வி... மேலும் பார்க்க

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் வழக்கு: ‘புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை’

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் வழக்கில், 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக பிரமாண பத்திரம் ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை என்று அந்தக் கோயிலை நிா்வகிக்கும் திருவாங்கூா் தேவஸ்வ வாரிய... மேலும் பார்க்க