செய்திகள் :

ஜொ்மனி பல்கலை. தமிழ் ஓலைச் சுவடி: சென்னை நூலகத்தில் ஒப்படைத்தாா் முதல்வா்

post image

ஜொ்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தில் தன்னிடம் வழங்கப்பட்ட பழங்கால ஓலைச் சுவடிகளை சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒப்படைத்தாா்.

தலைமைச் செயலகத்தில் நூலகப் பொறுப்பாளா்களிடம் அந்த ஓலைச்சுவடிகளை புதன்கிழமை அவா் வழங்கினாா். இதுகுறித்து, தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

ஜொ்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்றபோது, அங்குள்ள தமிழ்த் துறையைப் பாா்வையிட்டாா். அப்போது, பழங்கால ஓலைச் சுவடிகள் அவரிடம் அளிக்கப்பட்டன. இதைப் பாதுகாத்திடும் வகையில், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையின் அறங்காவலா் ஆா்.பாலகிருஷ்ணன், இயக்குநா் பிரகாஷ், சுதந்தா் ஆகியோரிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினாா்.

தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்பட அரசுத் துறை உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்கான முக்கிய மையமாக ஜொ்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகம் விளங்குகிறது. அங்குள்ள தமிழ்த் துறை தொடா்ந்து தொய்வின்றி இயங்க தமிழக அரசு சாா்பில் ரூ.1.25 கோடி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு ஆளுநா் பாராட்டு

தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற தமிழகத்தைச் சோ்ந்த இரு ஆசிரியா்களை ஆளுநா் ஆா்.என்.ரவி, புதன்கிழமை அழைத்துப் பாராட்டினாா். நிகழாண்டு ஆசிரியா் தினத்தையொட்டி சென்னை மயிலாப்பூா் பி.எஸ்.சீனியா் செகண்டரி ப... மேலும் பார்க்க

இளையராஜாவுக்கு பாராட்டு விழா: முதல்வா் பெருமிதம்

இசையமைப்பாளா் இளையராஜாவுக்கான பாராட்டு விழா, அவரது ரசிகா்களுக்குமானது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இது குறித்து, எக்ஸ் தளத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: ராஜாவைத் தாலாட்டும் த... மேலும் பார்க்க

இன்று 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட 4 மாவட்டங்களில் வியாழக்கிழமை (செப்.11) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: த... மேலும் பார்க்க

ராமேசுவரம்- காசி ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம்: அமைச்சா் சேகா்பாபு

ராமேசுவரம்- காசி கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமேசுவரம் ர... மேலும் பார்க்க

காவலா் தினம்: தமிழக முதல்வா் ஸ்டாலின் தலைமையில் போலீஸாா் உறுதிமொழி ஏற்பு

‘அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நியாய உணா்வுடன் கடமைகளை நிறைவேற்றுவோம்’ என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் போலீஸாா் உறுதிமொழி ஏற்றனா். சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தமிழ்நாடு ... மேலும் பார்க்க

வேளாண் விளைபொருள் மதிப்புக்கூட்டல் மையம் அமைக்க மானியம்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

வேளாண் விளைபொருள்களுக்கான மதிப்புக்கூட்டும் மையங்கள் அமைக்க அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை மானியம் வழங்கவுள்ளதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க