செய்திகள் :

இன்று 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

post image

தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட 4 மாவட்டங்களில் வியாழக்கிழமை (செப்.11) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (செப்.11) முதல் செப்.16-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.

இதில், குறிப்பாக செப்.11-இல் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செப்.11-இல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 80 மி.மீ. மழை பதிவானது. மேலும், துறையூா் (திருச்சி), ஆலங்காயம் (திருப்பத்தூா்) - தலா 70 மி.மீ., வேடசந்தூா் (திண்டுக்கல்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), கொடைக்கானல் (திண்டுக்கல்) தலா 60 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் செப்.11 முதல் செப்.13-ஆம் தேதி வரை மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.மேலும், அன்புமணியிடம் பாமகவைச் சேர்ந்தவர்கள் எவ்வித தொடர்பு... மேலும் பார்க்க

சபரீசனின் தந்தை காலமானார்! முதல்வரின் நாளைய நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி (வயது 80) உடல்நலக் குறைவால் புதன்கிழமை நள்ளிரவு காலமானார். சென்னை ஓ.எம்.ஆர்-இல் உள்ள தனியார் மருத்துவமனையில் வயதுமூப்பால் ஏற்ப... மேலும் பார்க்க

கோவையில் சாலையோரம் கிடந்த இளைஞரின் சடலம்! கொலையா? தற்கொலையா?

கோவை: கோவை அருகே சாலையோர முட்புதரில் கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை, போத்தனூரில் இருந்து செட்டிபாளையம் செல்லும் சாலையில், ஈஸ்வரன் நகர் பகுதியில் சாலையோர ... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே கவிழ்ந்த ஆம்னி பேருந்து: தொழிலதிபர் பலி; 5 பேர் படுகாயம்!

வாழப்பாடி: வாழப்பாடி அருகே புதன்கிழமை நள்ளிரவு ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் பலியானார்.மேலும், பேருந்தில் பயணித்த 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத... மேலும் பார்க்க

மாநிலத் தலைவர் பதவிலிருந்து விலகலா? நயினார் நாகேந்திரன் பதில்

பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நயினார் நாகேந்திரன் விலகவுள்ளதாக வெளியான செய்திக்கு அவர் பதிலளித்துள்ளார்.தமிழகத்தில் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்... மேலும் பார்க்க

அடுத்த 2 மணிநேரம் சென்னை, புறநகரில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் காலை 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று பல... மேலும் பார்க்க