செய்திகள் :

பாமக: ``நம் பிரதமர் மோடிகூட என்னை சந்தித்தால் கட்டி அணைத்துக்கொள்வார்'' - ராமதாஸ் சொல்வதென்ன?

post image

பா.ம.க-வில் கடந்த சில மாதங்களாகவே தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்குமிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு தரப்புமே தாங்கள்தான் கட்சித் தலைவர் எனச் சொல்லி வருகின்றன.

இதனால் அங்கு பல்வேறு குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இது ஒரு பக்கம் இருந்தாலும் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தொண்டர்களிடம் உரையாடி வருகிறார்.

ராமதாஸ்
ராமதாஸ்

`திட்டம் இருக்கிறது'

அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராம்தாஸ் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர் அம்பானி.

அவருடைய பேரன் பேத்திக்கு கிடைக்கக்கூடிய கல்வியும், வாய்ப்பும் கிராமத்தில் இருக்கும் ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும் என நினைக்கிறேன்.

அதற்கான திட்டங்களையும் வைத்திருக்கிறேன். நான் எந்தப் பதவியையும் விரும்பவுமில்லை. அதை நோக்கிச் செல்லவுமில்லை.

`குடியரசுத் தலைவராகியிருக்கலாம்'

நான் நினைத்திருந்தால் குடியரசுத் தலைவராகக் கூட ஆகியிருக்க முடியும். இப்போதுகூட துணைக் குடியரசுத் தலைவர் ஒரு தமிழர் தானே.

குடியரசுத் தலைவராக இருந்த எல்லோரும் என் நண்பர்கள்தான். நமது பிரதமர் மோடிகூட என்னை சந்தித்தால் கட்டி அணைத்துக்கொள்வார்.

நான் நினைத்திருந்தால் வேண்டிய பதவிக்குச் சென்றிருக்க முடியும். ஆனால் அது எதுவும் எனக்கு வேண்டாம். என் மக்கள் நலனே, தமிழ்நாட்டு மக்கள் நலனே முக்கியம்.

பாமக ராமதாஸ்

`பதவியை விரும்பவில்லை'

அதனால், யாரெல்லாம் மக்களுக்காகப் பேசுவார்களோ அவர்களையெல்லாம் எம்.எல்.ஏ-வாக சட்டமன்றத்துக்கு அனுப்பி அழகு பார்த்தேன்.

சபாநாயகர் சொன்னால் கூட நமது ஜி.கே மணி கேட்கமாட்டார். தொடர்ந்து மக்களுக்காகப் பேசிக்கொண்டே இருப்பார்.

உங்களுக்காக நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம். வாழ்நாள் முழுவதும் எந்த பதவிக்கும் செல்ல மாட்டேன் என சத்தியம் செய்து அதைக் கடைப்பிடித்து வாழ்ந்து வருகிறேன்." என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

VP Election: `15 ஓட்டு; கணித ரீதியான வெற்றி; எதிர்க்கட்சிகள் கூட்டணி பலப்பட்டிருக்கிறது' – காங்கிரஸ்

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே ஜக்தீப் தன்கர் குடியரசுத் துணைத் தலைவர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.இதனால், மாநி... மேலும் பார்க்க

Exclusive: ``வைகோ 100 முறை தாயகத்தில் சத்தியம் செய்தார்; காப்பாற்றவில்லை'' - மல்லை சத்யா சொல்வதென்ன?

ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும், அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோவுக்கும் சில காலமாகவே கருத்து மோதல் நிலவி வந்தது. இதற்கிடையில், மல்லை சத்யா கட்சியிலிரு... மேலும் பார்க்க

``எச்சரிக்கை, கவனமாக கேளுங்கள்; காசாவில் இருந்து உடனே கிளம்புங்கள்'' - தாக்குதலை அதிகரித்த நெதன்யாகு

நேற்று இஸ்ரேல் ஜெரூசேலத்தில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது.கூட்டமான பேருந்தில் ஏறிய இரண்டு பாலஸ்தீனிய தீவிரவாதிகள் தூப்பாக்கி சூடு நடத்தியதாக தகவவல் வெளியானது. இந்தச் சம்பவத்தில் குறைந்தபட்சம் 6 ப... மேலும் பார்க்க

ADMK: ஹரித்வாருக்கு செல்வதாகச் சொன்ன செங்கோட்டையன் - அமித் ஷாவின் வீட்டில் சந்திப்பு!? நடந்தது என்ன?

அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சியை 10 நாட்களில் தொடங்க வேண்டும் என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார்.இ... மேலும் பார்க்க

``செங்கோட்டையன் உடம்பில் மட்டும்தான் அதிமுக ரத்தம் ஓடுகிறதா?'' - தளவாய் சுந்தரம் கேள்வி

முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சொந்த சுற்றுப்பயணம். தமிழகத்திற்கு எந்த நிதியு... மேலும் பார்க்க

``மதுரை விமான நிலைய பெயர்; மக்கள் நலனை மறந்து EPS பேசுகிறார்'' - கிருஷ்ணசாமி விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என பரப்புரை பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்... மேலும் பார்க்க