செய்திகள் :

14 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

post image

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் புவனேசுவரத்தில் நடைபெற்ற தேவி விருதுகள் விழாவில், 14 பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

ஒடிசா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தேவி விருதுகள் - 2025 விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஒடிசா சட்டப்பேரவைத் தலைவர் சுரம பதி, பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்தார்.

தி நியூ இந்திய எக்ஸ்பிரஸின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா, தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.

விருது பெற்றவர்கள்

கட்டடக் கலைஞர் விஜயா அமுஜுரே, நீட் தேர்வில் வெற்றி பெற்ற திதாயி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் சம்பா ரசேதா, மாற்றுத்திறனாளிகள் நல ஆர்வலர் கார்கி பட்டாச்சார்யா, விவசாயி ரைமதி குரியா, மருத்துவர் ஸ்ம்ருதி ஸ்வைன், உலகப் புகழ்பெற்ற ஒடிஸி கலைஞர் சுஜாதா மொஹபத்ரா உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது.

மேலும், தொழில்முனைவோர் மினுஸ்ரீ மதுமிதா, விஞ்ஞானி ஜோதிர்மயி தாஷ், சமூக ஆர்வலர் நிபேதிதா லென்கா, சமையல் கலைஞர் மதுஸ்மிதா சோரன், வனக் காவலர் கிராப்தி சேத், கைவினைக் கலைஞர் கனகலதா தாஸ் மற்றும் நடிகை அர்ச்சிதா சாஹு ஆகியோருக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

At the Devi Awards ceremony held in Bhubaneswar on behalf of The New Indian Express Group, 14 women achievers were honoured with awards.

பாஜகவுக்கு வாக்களித்தால் கேரளத்தின் கலாசாரம் அழிந்துவிடும்: பினராயி விஜயன்

பாஜகவுக்கு வாக்களித்தால் கேரளத்தின் கலாசாரம் அழிந்துவிடும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். பாஜகவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் கேரளத்தின் கலாசாரத்தை அழித்துவிடும் என்றும் ஓணம் உள்பட ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 16 நச்கல்கள் சரண்!

சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் 16 நக்சல்கள் சரணடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களாகப் பல நக்சல்கள் சரணடைந்து வரும் நிலையில், வியாழக்கிழமை மேலும் 16 நக்சல்கள் மூத்த காவல்துறை ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் தொடர்புடைய 5 பயங்கரவாதிகள் கைது! சதித்திட்டம் முறியடிப்பு!

பாகிஸ்தானுடன் தொடர்புடைய 5 பயங்கரவாதிகளை தில்லி பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மேலும், ஐஇடி வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிப்பதற்காக அவர்கள் வைத்திருந்த பொருள்களையு... மேலும் பார்க்க

தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி

செப்டம்பர் 11-ஆம் தேதி இரண்டு மாறுபட்ட நினைவுகளைத் தூண்டுகிறது. முதலாவது, கடந்த 1893-ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் தனது புகழ்பெற்ற சிகாகோ உரையை ஆற்றிய நிகழ்வு. அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே, என்ற வார... மேலும் பார்க்க

ஆளுநர்களுக்கு காலக்கெடு: மாநிலங்கள் வரவேற்பு; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

நமது நிருபர்மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டதை மாநில அரசுகள் வரவேற்பதாக உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தமிழக அரசு வாதிட்டது.மசோதாக்கள் மீது ஆ... மேலும் பார்க்க

குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா வாக்காளரானதாக வழக்கு: தில்லி நீதிமன்றத் தீா்ப்பு ஒத்திவைப்பு

இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே போலி ஆவணங்கள் மூலம், வாக்காளா் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் பெயா் இடம்பெற்ாக தொடுக்கப்பட்ட வழக்கில், தில்லி நீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவ... மேலும் பார்க்க