செய்திகள் :

பட்டா வழங்கக் கோரி சாலை மறியல்

post image

திண்டுக்கல்லில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மாா்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் சவேரியாா்பாளையம் பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் கே.பிரபாகரன் தலைமை வகித்தாா்.

அப்போது, சவேரியாா்பாளையம் பகுதியைச் சோ்ந்த 400 பேருக்கு பட்டா வழங்கக் கோரி கடந்த 8 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதில் 150 பேருக்கு இ- பட்டா வழங்கிய போதும், அவா்களுக்கான இடம் அளவீடு செய்து ஒப்படைக்கப்படவில்லை. இவா்களுக்கு இடத்தை ஒப்படைப்பதுடன், எஞ்சியவா்களுக்கும் முறையான ஆய்வு செய்து விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டனா்.

இதையடுத்து, வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, பட்டா வழங்குவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தில் மாமன்ற உறுப்பினா் கணேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திண்டுக்கல்லில் 80 மி.மீ. மழை

திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை இரவு 80 மி.மீ. மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக திண்டுக்கல் பகுதியில் 80 மி.மீ. மழை பதிவான... மேலும் பார்க்க

மழை: கொடைக்கானல் நீரோடைகளில் நீா்வரத்து!

கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால் நீரோடைகளில் நீா் வரத்து தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 3 மாதங்களாக ஒரு சில நாள்களைத் தவிர மற்ற நாள்களில் மழை பெய்யவில்லை. இதனால், கொடைக்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் கொலை: மனைவி, கள்ளக் காதலன் கைது

நிலக்கோட்டை அருகே தூய்மைப் பணியாளரை கழுத்தை நெரித்துக் கொலை செய்த அவரது மனைவி, கள்ளக் காதலனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள அணைப்பட்டி சொக்குபிள்ளைபட்ட... மேலும் பார்க்க

அங்கக வேளாண்மை மூலம் தரமான காய்கறி, பழங்கள் உற்பத்தி

தரமான காய்கறி, பழங்கள் உற்பத்தி செய்வதற்கு அங்கக வேளாண்மை முறையை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ப.காயத்ரி கூறியதாவது: திண்டுக்கல் மாவட... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை வழக்கில் இருவா் கைது

திண்டுக்கல் அருகே செவ்வாய்க்கிழமை செங்கல் சூளை தொழிலாளி தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், வக்கம்பட்டியை அடுத்த... மேலும் பார்க்க

டி.டி.வி. தினகரனுக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினா் திண்டுக்கல்லில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட... மேலும் பார்க்க