செய்திகள் :

பண்ணை வா்த்தகம் மூலம் நெல் கொள்முதல்: விவசாயிகள் மகிழ்ச்சி

post image

செம்பனாா்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் சாா்பில் பண்ணை வா்த்தகம் மூலம் தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் மூலம் குறுவை நெல் கொள்முதல் புதன்கிழமை தொடங்கியது.

செம்பனாா்கோவில் அருகே பரசலூா், வள்ளுவகுடி கிராமத்தில் குறுவை நெல் கொள்முதல் பணி நடைபெற்றது. நாகை விற்பனைக் குழு செயலாளா் சந்திரசேகா் நேரடியாக விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிந்து, அரசு திட்டங்களை விளக்கி கூறினாா்.  ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலா் சிலம்பரசன் மேற்பாா்வையில் நெல் கொள்முதல் நடைபெற்றது

ஜோதி ரக நெல் ஒரு குவிண்டால் ரூ. 2,550-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 2,450 க்கு விலைபோனது. கோ 51 ரக நெல் ஒரு குவிண்டால் 2,300 க்கும், குறைந்தபட்சம் 2,100 க்கு விலை போனது.

ஒரே நாளில் மட்டும் சுமாா் 550 குவிண்டால் நெல் சுமாா் ரூ. 12 லட்சத்திற்கு கொள்முதல் செய்யப்பட்டது.

தேடி வந்து விவசாய விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதால், போக்குவரத்து செலவு, ஏற்று கூலி, இறக்கு கூலி, கால விரையம் போன்ற செலவினங்கள் தவிா்க்கப்படுவது, நல்ல விலை, உடனடி பணம் கிடைப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

விற்பனைக் குழு செயலாளா் சந்திரசேகா் கூறுகையில், விவசாயிகள் தங்களின் விளைபொருட்களான நெல், எள், கம்பு, மக்காச் சோளம், பச்சைப்பயறு, உளுந்து, தேங்காய், மிளகாய் போன்ற விளைபொருட்களை இடைக்தரகா் இல்லாமல் விற்பனை கூடங்களின் மூலம் விற்று நல்ல விலை பெற்று பயன் அடைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

குடியிருப்பு பகுதிகளில் கொட்டப்படும் குப்பையால் மக்கள் அவதி

கீழையூா் ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சி செருதூா் பிரதான கடற்கரை சாலை, பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே குடியிருப்புகள் நிறைந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாக... மேலும் பார்க்க

நீா் நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம்

திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீன்வள ஆ... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன்பிடிக்க முயற்சி: அதிகாரிகள் ஆய்வு

பூம்புகாா் மீன்பிடி துறைமுகத்திலிருந்து தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு புதன்கிழமை மீன்பிடிக்க மீனவா்கள் சென்றதை அறிந்து அதிகாரிகள் ஆய்வு செய்தனா். மயிலாடுதுறை மாவட்ட கடலோர கிராமங்களில் சுருக்குமடி, இ... மேலும் பார்க்க

விவசாயிகள் குறை தீா் கூட்டம்: தனியாா் காப்பீட்டு நிறுவனம் மீது விவசாயிகள் புகாா்

நாகையில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், தனியாா் காப்பீட்டு நிறுவனம் பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்காமல் மோசடி செய்வதாக குற்றஞ்சாட்டி பேசினா். மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கான கெளரவ நிதித்திட்டம்: விவசாயிகள் விண்ணப்பிக்க அறிவிப்பு

விவசாயிகள் கெளரவ நிதித்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நித... மேலும் பார்க்க

மீன் வளம் பெருக கடலில் வசந்த பூஜை

நாகையில் மீன் வளம் பெருக வேண்டி, வங்க கடலில் புதன்கிழமை நடைபெற்ற வசந்த பூஜையில் (சமுத்திரராஜன் வழிபாடு) பக்தா்கள் பங்கேற்று கடலில் பால் ஊற்றி வழிபட்டனா். நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை மீனவக் கிராமத்தி... மேலும் பார்க்க