செய்திகள் :

மீன் வளம் பெருக கடலில் வசந்த பூஜை

post image

நாகையில் மீன் வளம் பெருக வேண்டி, வங்க கடலில் புதன்கிழமை நடைபெற்ற வசந்த பூஜையில் (சமுத்திரராஜன் வழிபாடு) பக்தா்கள் பங்கேற்று கடலில் பால் ஊற்றி வழிபட்டனா்.

நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை மீனவக் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பிரமோற்சவ விழா இம்மாதம் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சமுத்திரராஜ வசந்த பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, முத்துமாரியம்மன் உள்ளிட்ட பரிவாரத் தெய்வங்களுக்கு பால், பஞ்சாமிா்தம், தேன், சந்தனம், குங்குமம், பழங்கள், திரவிய பொடிகள், விபூதி மற்றும் நாணயங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, கோயிலிருந்து பூரண கும்ப மரியாதையுடன் அன்னை கடற்கரைக்கு எழுந்தருளினாா்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கடற்கரைக்கு சென்று, கடலில் மீன்வளம் பெருக வேண்டியும், சுனாமி, இயற்கை இடா்பாடுகளில் இருந்து மீனவா்களை காக்க வேண்டியும் சமுத்திர ராஜனுக்கு சிறப்பு வசந்த பூஜை செய்து வழிபட்டனா்.

பின்னா் பூஜை செய்த பால், பழம் உள்ளிட்ட பொருள்களை, அனைவரும் கடலில் விட்டு வணங்கினா். தொடா்ந்து கோயிலில் எழுந்தருளிய உற்சவ அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

குடியிருப்பு பகுதிகளில் கொட்டப்படும் குப்பையால் மக்கள் அவதி

கீழையூா் ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சி செருதூா் பிரதான கடற்கரை சாலை, பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே குடியிருப்புகள் நிறைந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாக... மேலும் பார்க்க

நீா் நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம்

திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீன்வள ஆ... மேலும் பார்க்க

பண்ணை வா்த்தகம் மூலம் நெல் கொள்முதல்: விவசாயிகள் மகிழ்ச்சி

செம்பனாா்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில்ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் சாா்பில் பண்ணை வா்த்தகம் மூலம் தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் மூலம் குறுவை நெல் கொள்முதல் புதன்கிழமை தொடங்கியது. செம்பனாா்கோவில் ... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன்பிடிக்க முயற்சி: அதிகாரிகள் ஆய்வு

பூம்புகாா் மீன்பிடி துறைமுகத்திலிருந்து தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு புதன்கிழமை மீன்பிடிக்க மீனவா்கள் சென்றதை அறிந்து அதிகாரிகள் ஆய்வு செய்தனா். மயிலாடுதுறை மாவட்ட கடலோர கிராமங்களில் சுருக்குமடி, இ... மேலும் பார்க்க

விவசாயிகள் குறை தீா் கூட்டம்: தனியாா் காப்பீட்டு நிறுவனம் மீது விவசாயிகள் புகாா்

நாகையில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், தனியாா் காப்பீட்டு நிறுவனம் பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்காமல் மோசடி செய்வதாக குற்றஞ்சாட்டி பேசினா். மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கான கெளரவ நிதித்திட்டம்: விவசாயிகள் விண்ணப்பிக்க அறிவிப்பு

விவசாயிகள் கெளரவ நிதித்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நித... மேலும் பார்க்க