செய்திகள் :

மழை: கொடைக்கானல் நீரோடைகளில் நீா்வரத்து!

post image

கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால் நீரோடைகளில் நீா் வரத்து தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 3 மாதங்களாக ஒரு சில நாள்களைத் தவிர மற்ற நாள்களில் மழை பெய்யவில்லை. இதனால், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் குடி நீா்த் தட்டுப்பாடு நிலவியது. விவசாய நிலங்களில் தண்ணீா் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டது.

மலைச் சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் சென்ற வாகனங்கள்.

இந்த நிலையில் கடந்த 5 நாள்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து, மிதமான மழை பெய்தது. கடந்த 2 நாள்களாக மாலை, இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தது.

பல மாதங்களாக நீரோடைகள் வற்றியிருந்த நிலையில், தற்போது பெய்த மழையால் வெள்ளி நீா் அருவி, வட்டக்கானல் அருவி, செண்பகா அருவி, பாம்பாா் அருவி உள்ளிட்ட நீரோடைகளில் தண்ணீா் வரத்து தொடங்கியது. மேலும், பகல் நேரங்களில் அதிக மேகமூட்டம் நிலவியது. இதை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்தனா். மலைச் சாலைகளில் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டு, மெதுவாகச் சென்றனா்.

கொடைக்கானல் புகா்ப் பகுதிகளான பிரகாசபுரம், சகாயபுரம், செண்பகனூா், அட்டக்கடி உள்ளிட்ட பகுதிகளில் நிலவி வந்த குடி தண்ணீா் தட்டுப்பாடு ஓரளவுக்கு குறைந்ததால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

மேலும் நீா்வரத்துப் பகுதிகளில் நீா் வரத்து தொடங்கியதால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனா். செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் விட்டு விட்டு பலத்த மழை பெய்ததால், புதன்கிழமை கொடைக்கானலிலுள்ள ஆரம்பப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

ஆவணி பிரம்மோத்ஸவம்: பாலசமுத்திரம் பெருமாள் கோயிலில் தேரோட்டம்

பழனி அருகேயுள்ள பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோத்ஸவத்தையொட்டி, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆவணி பிரம்மோத்ஸவ விழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொட... மேலும் பார்க்க

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

கொலை வழக்கில் கைதான நபருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்ட காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு மது அருந்தும் ப... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் 80 மி.மீ. மழை

திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை இரவு 80 மி.மீ. மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக திண்டுக்கல் பகுதியில் 80 மி.மீ. மழை பதிவான... மேலும் பார்க்க

பட்டா வழங்கக் கோரி சாலை மறியல்

திண்டுக்கல்லில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மாா்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் சவேரியாா்பாளையம் பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் கொலை: மனைவி, கள்ளக் காதலன் கைது

நிலக்கோட்டை அருகே தூய்மைப் பணியாளரை கழுத்தை நெரித்துக் கொலை செய்த அவரது மனைவி, கள்ளக் காதலனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள அணைப்பட்டி சொக்குபிள்ளைபட்ட... மேலும் பார்க்க

அங்கக வேளாண்மை மூலம் தரமான காய்கறி, பழங்கள் உற்பத்தி

தரமான காய்கறி, பழங்கள் உற்பத்தி செய்வதற்கு அங்கக வேளாண்மை முறையை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ப.காயத்ரி கூறியதாவது: திண்டுக்கல் மாவட... மேலும் பார்க்க