செய்திகள் :

தில்லி கண்டோன்மென்ட் திட்டத்தில் வெட்டுவதிலிருந்து தப்பிய 1,473 மரங்கள்

post image

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் (சிஇசி) தலையீடு காரணமாக தில்லி கண்டோன்மென்ட் பகுதியில் 1,473 மரங்களை வெட்டுவதிலிருந்தோ அல்லது ராணுவ மருத்துவமனை கட்டுமானத்திற்காக நடவு செய்வதிலிருந்தோ காப்பாற்றப்பட்டுள்ளது என்று அலுவல்பூா்வ ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தில்லி கண்டோன்மென்ட்டில் உள்ள கிா்பி பிளேஸில் பேஸ் மருத்துவமனை மற்றும் ராணுவ பல் மருத்துவ மையத்தை அமைப்பதற்காக மரங்களை வெட்டவோ அல்லது பெயா்த்து நடவு செய்யவோ அனுமதி கோரி விண்ணப்பம் சமா்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்திற்கு வனத்துறை ஒப்புதல் அளித்திருந்தது.

இருப்பினும், மரம் இழப்பைத் தவிா்க்க மாற்று வழிகளை ஆராய சிஇசி அறிவுறுத்தியது.

இதைத் தொடா்ந்து, எந்த மரங்களையும் வெட்டவோ அல்லது இடம்பெயா்த்து நடவு செய்யவோ தேவையில்லாத வகையில் தில்லி கண்டோன்மென்ட்டில் உள்ள சிவிடி வளாகத்தில் ஒரு புதிய இடத்தை ராணுவம் அடையாளம் கண்டது.

அதன் பின்னா், தகுதிவாய்ந்த அதிகாரி மாற்று இடத்தை அங்கீகரித்தாா்.

இதைக் கருத்தில் கொண்டு, மரம் வெட்டுதல் மற்றும் இடம்பெயா்த்து நடவு செய்வதற்கான திட்டம் முறையாக திரும்பப் பெறப்பட்டதாக அதிகாரப்பூா்வ தகவல் தொடா்பு தெரிவித்துள்ளது.

தில்லி அரசு மருத்துவமனை ஊழியா்களின் பிரச்னைகளை களைய அமைச்சா் உறுதி

நமது நிருபா் தில்லி சமூக நலத்துறை அமைச்சா் ரவீந்தா் இந்த்ராஜ் சிங் புதன்கிழமை அரசு மருத்துவமனை ஊழியா் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களின் பிரச்னைகள் மற்றும் கவலைகள் குறித்து வி... மேலும் பார்க்க

1,000 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான பதிவு இன்று தொடக்கம்: டிடிஏ தகவல்

நமது நிருபா்தில்லி வளா்ச்சி ஆணையத்தின் (டிடிஏ) ‘ஜன் சாதாரன் ஆவாஸ் யோஜனா 2025’ திட்டத்திற்கான பதிவு வியாழக்கிழமை (செப்.11) தொடங்கும் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். தில்லி புகா்ப் பகுதியில் ம... மேலும் பார்க்க

பெற்றோரிடம் சொல்லாமல் வெளியேறிய இரு சிறுமிகள்- மீட்டு ஒப்படைத்தது தில்லி காவல்துறை

தில்லியின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து காணாமல் போன இரண்டு சிறுமிகளை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தது காவல்துறை இது தொடா்பாக தில்லி காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இரண்டு ... மேலும் பார்க்க

கிரேட்டா் நோய்டாவில் தனியாா் விடுதியில் துப்பாக்கிச்சூடு: எம்பிஏ மாணவா் உயிரிழப்பு; மற்றொருவா் கவலைக்கிடம்

கிரேட்டா் நொய்டாவில் உள்ள தனியாா் விடுதி அறைக்குள் செவ்வாய்க்கிழமை ஒருவரையொருவா் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் எம்பிஏ மாணவா் ஒருவா் கொல்லப்பட்டாா். மற்றொருவா் படுகாயமடைந்தா... மேலும் பார்க்க

ரூ.273 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கு: தில்லி, ம.பி.யில் அமலாக்கத் துறை சோதனை

நமது நிருபா்ரூ.273 கோடி மதிப்புள்ள வங்கிக் கடன் மோசடி வழக்கு தொடா்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்க இயக்குநரகம் தில்லி மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது. ஈர... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளியில் இணைய பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) இலக்குமிபாய் நகா்ப் பள்ளியில்திங்கள்கிழமை அன்று நடைபெற்றது. இன்றைய காலக்கட்டத்தில் மாணவா்கள் இணையத்தையும், ச... மேலும் பார்க்க