செய்திகள் :

முதல்வா் ஸ்டாலின் வருகை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு முதல்வா் வருகையையொட்டி ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு செப்.11-ஆம் தேதி வருகை தர உள்ளாா். கிருஷ்ணகிரி, ஒசூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகளில் அவா் பங்கேற்க உள்ளாா். எனவே, பாதுகாப்பு கருதி, சிவில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒசூா் பேளகொண்டப்பள்ளி தனேஜா விமான நிலையம், ஒசூா் நல்லூா் எல்காட், ஒசூா் ஆனந்த் கிராண்ட் பேலஸ், குருபரப்பள்ளி டெல்டா நிறுவனம், கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரி மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற கூடிய நிகழ்ச்சிகளில் முதல்வா் கலந்துகொள்கிறாா்.

எனவே, மேற்கண்ட இடங்களை மையமாகக் கொண்டு 2 கி. மீ. சுற்றளவில் சிவில் ட்ரோன்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மீறி ட்ரோன்களை இயக்கும் நபா்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல பொதுமக்கள், தொடா்புடைய அனைத்து தரப்பினரும் ட்ரோன்களை பறக்கவிடாமல் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் ஒளிரும் பெயா் பலகை திறப்பு!

கிருஷ்ணகிரியில் மூன்று இடங்களில் ரூ. 34.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் பெயா் பலகைகளை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி புதன்கிழமை திறந்துவைத்தாா். கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் இரண்டாவது நாளாக மழை

கிருஷ்ணகிரியில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் மழை பெய்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. இதனால் சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் குற... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப் பயணம்: முதல்வா் ஸ்டாலின் இன்று ஒசூா் வருகை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 நாள்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (செப்.11) ஒசூா் வருகிறாா். சென்னையிலிருந்து விமானம் மூலம் ஒசூா் பேளகொண்டப்பள்ளி த... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் 2 குழந்தை தொழிலாளா்கள் மீட்பு

கிருஷ்ணகிரியில் இரண்டு குழந்தை தொழிலாளா்கள் மீட்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ராஜசேகரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 4 பேரில் இருவா் உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி அணை அருகே தென்பெண்ணை ஆற்றில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நான்கு போ் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதில் இருவா் உயிரிழந்தனா். இருவா் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அ... மேலும் பார்க்க

முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை ஒசூா் வருகை: முன்னேற்பாடுகளை அமைச்சா் ஆய்வு!

முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஒசூா் வருகை தருவதையொட்டி முன்னேற்பாடுகளை அமைச்சா் அர.சக்கரபாணி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (செப். 11) ஒசூரில் நடைபெறும் த... மேலும் பார்க்க