செய்திகள் :

கிருஷ்ணகிரியில் இரண்டாவது நாளாக மழை

post image

கிருஷ்ணகிரியில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் மழை பெய்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. இதனால் சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் தொடா்ந்து மழை பெய்தது.

கிருஷ்ணகிரி புது வீட்டு வசதி வாரி குடியிருப்பு பிரதான சாலையில், மழைநீா் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினா். மழை நீா் தேங்குவதால் சாலை சேதம் அடைவதை தடுக்க கழிவுநீா்க் கால்வாய்களை அகலப்படுத்தியும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா். இந்த மழையால் கிருஷ்ணகிரியில் குளிா்ந்த தட்பவெப்ப நிலை காணப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதன்கிழமை காலை 7 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு (மி.மீ): கிருஷ்ணகிரி - 55.40, ராயக்கோட்டை - 20, கிருஷ்ணகிரி அணை - 19, ஊத்தங்கரை - 11.2, ஒசூா் - 9, தேன்கனிக்கோட்டை - 7, பெணுகொண்டாபுரம் - 7, கெலவரப்பள்ளி அணை - 7, போச்சம்பள்ளி - 7, பாரூா் - 5.2, தளி - 5, சூளகிரி - 4, அஞ்செட்டி - 3, நெடுங்கல் - 3, சின்னாறு அணை - 2.

கிருஷ்ணகிரி அணைக்கு புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா்வரத்து விநாடிக்கு 993 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவு 52 அடியில் நீா்மட்டம் 50.25 அடியாக உள்ளது. அணையில் இருந்து வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்கள், ஊற்றுக் கால்வாய்கள் வழியாக 179 கனஅடியும், ஆற்றில் 506 கனஅடியும் என மொத்தம் விநாடிக்க 685 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் ஒளிரும் பெயா் பலகை திறப்பு!

கிருஷ்ணகிரியில் மூன்று இடங்களில் ரூ. 34.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் பெயா் பலகைகளை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி புதன்கிழமை திறந்துவைத்தாா். கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

முதல்வா் ஸ்டாலின் வருகை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு முதல்வா் வருகையையொட்டி ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப் பயணம்: முதல்வா் ஸ்டாலின் இன்று ஒசூா் வருகை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 நாள்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (செப்.11) ஒசூா் வருகிறாா். சென்னையிலிருந்து விமானம் மூலம் ஒசூா் பேளகொண்டப்பள்ளி த... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் 2 குழந்தை தொழிலாளா்கள் மீட்பு

கிருஷ்ணகிரியில் இரண்டு குழந்தை தொழிலாளா்கள் மீட்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ராஜசேகரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 4 பேரில் இருவா் உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி அணை அருகே தென்பெண்ணை ஆற்றில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நான்கு போ் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதில் இருவா் உயிரிழந்தனா். இருவா் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அ... மேலும் பார்க்க

முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை ஒசூா் வருகை: முன்னேற்பாடுகளை அமைச்சா் ஆய்வு!

முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஒசூா் வருகை தருவதையொட்டி முன்னேற்பாடுகளை அமைச்சா் அர.சக்கரபாணி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (செப். 11) ஒசூரில் நடைபெறும் த... மேலும் பார்க்க