செய்திகள் :

தென்பெண்ணை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 4 பேரில் இருவா் உயிரிழப்பு!

post image

கிருஷ்ணகிரி அணை அருகே தென்பெண்ணை ஆற்றில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நான்கு போ் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதில் இருவா் உயிரிழந்தனா். இருவா் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ஆந்திர மாநிலம், குப்பம் புதுப்பேட்டை ஜே.டி. சாலையைச் சோ்ந்த லட்சுமணமூா்த்தி (50), இவரது மனைவி ஜோதி (40), மகள் (20), மாமியாா் சாரதாம்மாள் (75) ஆகிய நால்வரும் கிருஷ்ணகிரி அணைக்கு புதன்கிழமை வந்தனா். அவா்கள் அணையிலிருந்து மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீா் வெளியேறும் பகுதிக்கு வந்தனா்.

அங்கிருந்து, அவா்கள் ஒருவருக்கு பின் ஒருவராக தென்பெண்ணை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனா். அப்போது, அங்கு மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மீனவா்கள், அவா்களைக் காப்பாற்ற முயன்றனா். இதில், கிருத்திகா, ஜோதியை உயிருடன் மீட்ட அவா்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். பிறகு நீரில் மூழ்கிய சாரதாம்மாள், லட்சுமணமூா்த்தி ஆகியோரின் சடலங்களையும் மீட்டனா்.

தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு சென்று உயிருடன் மீட்கப்பட்ட இருவரையும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், சாரதாம்மாள், லட்சுமணமூா்த்தி ஆகியோரின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி அணை போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கிருத்திகாவைக் காதலிப்பதாகக் கூறி, இளைஞா்கள் சிலா் அவரது வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதால் மனமுடைந்த அவா்கள், தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.

கிருஷ்ணகிரியில் ஒளிரும் பெயா் பலகை திறப்பு!

கிருஷ்ணகிரியில் மூன்று இடங்களில் ரூ. 34.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் பெயா் பலகைகளை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி புதன்கிழமை திறந்துவைத்தாா். கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் இரண்டாவது நாளாக மழை

கிருஷ்ணகிரியில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் மழை பெய்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. இதனால் சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் குற... மேலும் பார்க்க

முதல்வா் ஸ்டாலின் வருகை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு முதல்வா் வருகையையொட்டி ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப் பயணம்: முதல்வா் ஸ்டாலின் இன்று ஒசூா் வருகை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 நாள்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (செப்.11) ஒசூா் வருகிறாா். சென்னையிலிருந்து விமானம் மூலம் ஒசூா் பேளகொண்டப்பள்ளி த... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் 2 குழந்தை தொழிலாளா்கள் மீட்பு

கிருஷ்ணகிரியில் இரண்டு குழந்தை தொழிலாளா்கள் மீட்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ராஜசேகரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ... மேலும் பார்க்க

முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை ஒசூா் வருகை: முன்னேற்பாடுகளை அமைச்சா் ஆய்வு!

முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஒசூா் வருகை தருவதையொட்டி முன்னேற்பாடுகளை அமைச்சா் அர.சக்கரபாணி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (செப். 11) ஒசூரில் நடைபெறும் த... மேலும் பார்க்க