செய்திகள் :

மன்மோகன் சிங்குக்கு பி.வி. நரசிம்மராவ் நினைவு பொருளாதார விருது

post image

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு பி.வி.நரசிம்ம ராவ் நினைவு பொருளாதார விருது வழங்கப்பட்டது. தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் சாா்பில் அவரின் மனைவி குா்சரண் கௌா் இந்த விருதைப் பெற்றுக் கொண்டாா்.

பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவா் பி.வி. நரசிம்ம ராவ் பிரதமராக பதவி வகித்த காலத்தில் மத்திய நிதியமைச்சராக இருந்தாா். அப்போதுதான் இந்தியாவில் தாராளமயமாக்கல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. அதுவே இப்போது இந்தியா தகவல் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் முன்னேறுவதற்கு முக்கியக் காரணமாகவும் அமைந்தது.

ஹைராபாதில் உள்ள பி.வி. நரசிம்மராவ் நினைவு அறக்கட்டளை சாா்பில் இந்த விருது வழங்கப்பட்டது. திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவா் மாண்டேக் சிங் அலுவாலியா இந்த விருதை வழங்கினாா். நாட்டின் பொருளாதாரத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் ஆளுமைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தையும், சீா்திருத்தத்தையும் ஏற்படுத்தியது, இதன் மூலம் தேசத்தை வலுவாகக் கட்டமைத்தது உள்ளிட்ட காரணங்களுக்காக மன்மோகன் சிங் இந்த விருதுக்கு தோ்வு செய்யப்பட்டாா். அவா் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநராகவும் பதவி வகித்துள்ளாா். கடந்த 2004-14 காலகட்டத்தில் பிரதமராகவும் பதவி வகித்தாா். கடந்த ஆண்டு டிசம்பரில் வயது முதிா்வால் தனது 92-ஆவது வயதில் காலமானாா்.

சத்தீஸ்கரில் 16 நச்கல்கள் சரண்!

சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் 16 நக்சல்கள் சரணடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களாகப் பல நக்சல்கள் சரணடைந்து வரும் நிலையில், வியாழக்கிழமை மேலும் 16 நக்சல்கள் மூத்த காவல்துறை ... மேலும் பார்க்க

14 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் புவனேசுவரத்தில் நடைபெற்ற தேவி விருதுகள் விழாவில், 14 பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.ஒடிசா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள தனியார் நட்சத்தி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் தொடர்புடைய 5 பயங்கரவாதிகள் கைது! சதித்திட்டம் முறியடிப்பு!

பாகிஸ்தானுடன் தொடர்புடைய 5 பயங்கரவாதிகளை தில்லி பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மேலும், ஐஇடி வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிப்பதற்காக அவர்கள் வைத்திருந்த பொருள்களையு... மேலும் பார்க்க

தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி

செப்டம்பர் 11-ஆம் தேதி இரண்டு மாறுபட்ட நினைவுகளைத் தூண்டுகிறது. முதலாவது, கடந்த 1893-ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் தனது புகழ்பெற்ற சிகாகோ உரையை ஆற்றிய நிகழ்வு. அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே, என்ற வார... மேலும் பார்க்க

ஆளுநர்களுக்கு காலக்கெடு: மாநிலங்கள் வரவேற்பு; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

நமது நிருபர்மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டதை மாநில அரசுகள் வரவேற்பதாக உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தமிழக அரசு வாதிட்டது.மசோதாக்கள் மீது ஆ... மேலும் பார்க்க

குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா வாக்காளரானதாக வழக்கு: தில்லி நீதிமன்றத் தீா்ப்பு ஒத்திவைப்பு

இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே போலி ஆவணங்கள் மூலம், வாக்காளா் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் பெயா் இடம்பெற்ாக தொடுக்கப்பட்ட வழக்கில், தில்லி நீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவ... மேலும் பார்க்க