செய்திகள் :

கான்ஜுரிங் படத்தின் சுவாரசியத்தை குலைத்த ரசிகரால் திரையரங்கில் அடிதடி!

post image

மும்பையில் திரையரங்கினுள் படத்தின் கதையை முன்கூட்டியே சொல்லி, படத்தின் சுவாரசியத்தைக் குலைத்ததை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.

புணேவில் ஹாலிவுட் பேய்ப் படமான கான்ஜுரிங் - தி லாஸ்ட் ரைட்ஸ் படத்தைக் காண மென்பொருள் பொறியாளர் ஒருவர், தனது குடும்பத்தினருடன் சின்ச்வாட் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் சென்றார்.

இந்த நிலையில், அவர்களின் இருக்கைக்கு பின்னிருக்கையில் இருந்த ஒருவர், படத்தின் கதையையும் ஒவ்வொரு காட்சியையும் முன்கூட்டியே தனது மனைவியிடம் சொல்லிக்கொண்டு இருந்தார். இதனால், படத்தின் மீதான சுவாரசியம் குறைவதாக மென்பொருள் பொறியாளர் எச்சரித்தார்.

இருப்பினும், பின்னிருக்கையில் இருந்தவர் தொடர்ந்து கதையை சொல்லிக்கொண்டே இருந்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதத்தின் இறுதியில், மென்பொருள் பொறியாளரை பின்னிருக்கையில் இருந்தவரும் அவரது மனைவியும் தாக்கினார். தடுக்கச் சென்ற மென்பொருள் பொறியாளரின் மனைவியையும் தாக்கினார்.

இதனையடுத்து, தாக்குதல் நடத்திய இருவர் மீதும் மென்பொருள் பொறியாளர் வழக்குப்பதிவு செய்ததையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Pune Techie, Wife Assaulted At INOX Chinchwad After Dispute Over Movie Spoilers

சத்தீஸ்கர்: ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். காங்கேர் மாவட்டத்தில், கெடாபெடா வனப் பகுதியில், மாவட்ட ரிசர்வ் காவல் படை மற்றும் ... மேலும் பார்க்க

பிகாரில் மோகாமா-முங்கர் 4 வழிச்சாலைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

புதுதில்லி: பிகாரில் உள்ள பக்ஸர்-பாகல்பூர் அதிவேக வழித்தடத்தில் மொகாமா-முங்கர் 4 வழிச்சாலை பிரிவை ரூ.4,447.38 கோடி செலவில் கட்டுவதற்கு அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ... மேலும் பார்க்க

நேபாள வன்முறை: சிறைக்கு தீ வைத்து கைதிகள் தப்பியோட்டம்!

நேபாளத்தில் வெடித்த கலவரத்துக்கு மத்தியில் சிறைக்கு தீ வைத்து கைதிகள் தப்பியோடியுள்ளனர். நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் நடைபெற்று வரும் போராட்... மேலும் பார்க்க

அயோத்தி கோயில் குறித்து பெருமையடையாதவர் இந்தியரா? யோகி ஆதித்யநாத்!

அயோத்தி ராமர் கோயில் குறித்து ஒருவர் பெருமையடையவில்லை என்றால், அவர் இந்தியர் என்பதே சந்தேகம்தான் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். கோராக்நாத் கோயில் வளாகத்தில், இன்று (செப்.10) ... மேலும் பார்க்க

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்? அக்டோபரில் தொடக்கம்!

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அக்டோபர் மாதத்தின் எந்த நாளிலும் பணிகளைத் தொடங்க தயாராக இருக்குமாறு இந்திய த... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக இந்தியாவில் வசித்த பாகிஸ்தானியர் வெளியேற்றம்!

ஹைதராபாத்தில் இருந்து, சட்டவிரோதமாக இந்தியாவில் வசித்த பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் அவரது தாயகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த முஹம்மது உஸ்மான் (எ) முஹம்மது அப்பாஸ் இக்ர... மேலும் பார்க்க