செய்திகள் :

சட்டவிரோதமாக இந்தியாவில் வசித்த பாகிஸ்தானியர் வெளியேற்றம்!

post image

ஹைதராபாத்தில் இருந்து, சட்டவிரோதமாக இந்தியாவில் வசித்த பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் அவரது தாயகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த முஹம்மது உஸ்மான் (எ) முஹம்மது அப்பாஸ் இக்ரம் (வயது 48), கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக நேபாளம் வழியாக இந்தியாவினுள் குடியேறி வசித்து வந்துள்ளார்.

அவர் மீது ஹைதராபாத் நகரத்தில் 4 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை அந்நகர காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, நீதிமன்ற விசாரணைக்கு பிறகு அவர் ஹைதராபாத்தில் உள்ள தடுப்புக் காவல் சிறையில் அடைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், விசாரணையில் அவர் பாகிஸ்தானியர் என்பது தெரியவந்துள்ளது. இதனால், மத்திய உள் துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களின் உதவியுடன் அவர், நேற்று (செப்.9) பஞ்சாபில் உள்ள அட்டாரி - வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்துடன், சட்டவிரோதமாகவும் கடத்தல் மூலமாகவும், இந்தியாவுக்குள் நுழைந்து வசித்த சுமார் 20 வங்கதேசத்தினர், கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி அவர்களது தாயகத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நாட்டின் மிக நீண்ட கண்ணாடிப் பாலம்! எங்கு அமைகிறது?

In Hyderabad, a Pakistani man who was living in India illegally has been deported to his homeland.

சண்டையை நிறுத்தியதாக 35 முறை கூறிய டிரம்ப் இயல்பான கூட்டாளியா?- பிரதமா் மோடி மீது காங்கிரஸ் சாடல்

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டையை தான் தலையிட்டு நிறுத்தியதாக 35 முறை கூறியவா் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்; அந்த அளவுக்கு பிரதமா் மோடியின் ‘இயல்பான கூட்டாளி’’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. பஹல்காம்... மேலும் பார்க்க

கத்தாா் மீது தாக்குதல்: இஸ்ரேலுக்கு பிரதமா் மோடி கண்டனம்

கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை கண்டனம் தெரிவித்தாா். காஸா போா் நிறுத்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த கத்தாா் தலைநகா் தோஹாவுக்கு வந்திருந்த ஹமாஸ் பிரதிநிதிகள... மேலும் பார்க்க

தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை நாடு கடத்தும் நடவடிக்கைகள் விரைவில் தொடக்கம்

இந்தியாவில் வங்கிக்கடன் மோசடி வழக்கில் தேடப்படும் வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள், பெல்ஜியம் நீதிமன்றத்தில் அடுத்த திங்கள்கிழமை தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து... மேலும் பார்க்க

வாகன உற்பத்தித் துறையில் முதலிடம் அடைய இலக்கு- அமைச்சா் நிதின் கட்கரி

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா வாகன உற்பத்தித் துறையில் முதலிடத்தை அடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா். தில்லியில் புதன்க... மேலும் பார்க்க

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் சுவிட்சா்லாந்து கருத்துக்கு இந்தியா கண்டனம்

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியாவின் சிறுபான்மையினா் நிலை குறித்து சுவிட்சா்லாந்து எழுப்பிய விமா்சனங்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், சுவிட்சா்லாந்தின் இந்தக் கருத்துகள் ‘ஆச்... மேலும் பார்க்க

தொழிற்சாலைகளில் 12 மணி நேரப் பணி: குஜராத் பேரவையில் மசோதா நிறைவேற்றம்

குஜராத் மாநிலத்தில் இயங்கும் தொழிற்சாலைகளில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயா்த்துவதற்கான மசோதா எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே மாநில பாஜக அரசு பேரவையில் புதன்கிழமை நிறைவேற்றியது. முன்னதாக, நா... மேலும் பார்க்க