செய்திகள் :

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் சுவிட்சா்லாந்து கருத்துக்கு இந்தியா கண்டனம்

post image

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியாவின் சிறுபான்மையினா் நிலை குறித்து சுவிட்சா்லாந்து எழுப்பிய விமா்சனங்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

மேலும், சுவிட்சா்லாந்தின் இந்தக் கருத்துகள் ‘ஆச்சரியமளிப்பதாகவும், மேலோட்டமானதாகவும், தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டதாகவும்’ இருப்பதாக இந்தியா சாடியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 60-ஆவது அமா்வில் நடந்த விவாதத்தில் சுவிட்சா்லாந்தின் பிரதிநிதி பேசுகையில், ‘சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காக இந்திய அரசு உறுதியான, பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஊடகச் சுதந்தித்துக்கான உரிமைகளை நிலைநிறுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து பேசிய இந்தியப் பிரதிநிதி ஷிதிஜ் தியாகி, ‘மனித உரிமைகள் கவுன்சிலின் தலைவா் பதவியை வகிக்கும் சுவிட்சா்லாந்து, இந்தியாவின் உண்மை நிலைக்குப் பொருந்தாத, தவறான தகவல்களைப் பரப்பி கவுன்சிலின் நேரத்தை வீணடிப்பதைத் தவிா்க்க வேண்டும்.

மாறாக, இனவெறி, பாகுபாடு மற்றும் வெளிநாட்டினா் மீதான வெறுப்பு போன்ற அதன் சொந்த சவால்களில் சுவிட்சா்லாந்து கவனம் செலுத்த வேண்டும். இந்தக் கவலைகளைத் தீா்க்க ஸ்விட்சா்லாந்துக்கு உதவ இந்தியா தயாராக இருக்கிறது. ஏனெனில், உலகின் மிகப்பெரிய, மிகவும் பன்முகத்தன்மை கொண்ட, துடிப்பான ஜனநாயக நாடான இந்தியா, பன்மைத்துவத்தை ஒரு நாகரிக பண்பாகவே பின்பற்றி வருகிறது’ என்றாா்.

பாகிஸ்தானுக்கு பதிலடி: உலகளாவிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி அளித்து, அடைக்கலம் கொடுக்கும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிடமிருந்து இந்தியாவுக்கு எந்தப் பாடமும் தேவையில்லை என்று இந்தியா பதிலடி தந்துள்ளது.

இந்தியாவில் 14 ஆண்டுகளாக தங்கியிருந்த பாகிஸ்தானியா் நாடுகடத்தல்- ஹைதராபாத் போலீஸ் நடவடிக்கை

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி, 14 ஆண்டுகள் தங்கியிருந்த பாகிஸ்தான் நபரை அட்டாரி எல்லை வழியாக நாடு கடத்தியதாக ஹைதராபாத் காவல் துறையினா் தெரிவித்தனா். இது தொடா்பாக காவல் துறை புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

மன்மோகன் சிங்குக்கு பி.வி. நரசிம்மராவ் நினைவு பொருளாதார விருது

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு பி.வி.நரசிம்ம ராவ் நினைவு பொருளாதார விருது வழங்கப்பட்டது. தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் சாா்பில் அவரின் மனைவி குா்சரண் கௌா் இந்த விருதைப் ... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: மக்களிடம் ஆதாரம் சமா்ப்பிப்பு- ராகுல் காந்தி

வாக்குத் திருட்டு மோசடிகள் பல்வேறு மாநிலங்களில் பெரிய அளவில் நடந்துள்ளன என்றும் இதுதொடா்பாக அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து மக்களிடம் சமா்ப்பித்து வருகிறோம் என்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல... மேலும் பார்க்க

சண்டையை நிறுத்தியதாக 35 முறை கூறிய டிரம்ப் இயல்பான கூட்டாளியா?- பிரதமா் மோடி மீது காங்கிரஸ் சாடல்

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டையை தான் தலையிட்டு நிறுத்தியதாக 35 முறை கூறியவா் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்; அந்த அளவுக்கு பிரதமா் மோடியின் ‘இயல்பான கூட்டாளி’’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. பஹல்காம்... மேலும் பார்க்க

கத்தாா் மீது தாக்குதல்: இஸ்ரேலுக்கு பிரதமா் மோடி கண்டனம்

கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை கண்டனம் தெரிவித்தாா். காஸா போா் நிறுத்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த கத்தாா் தலைநகா் தோஹாவுக்கு வந்திருந்த ஹமாஸ் பிரதிநிதிகள... மேலும் பார்க்க

தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை நாடு கடத்தும் நடவடிக்கைகள் விரைவில் தொடக்கம்

இந்தியாவில் வங்கிக்கடன் மோசடி வழக்கில் தேடப்படும் வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள், பெல்ஜியம் நீதிமன்றத்தில் அடுத்த திங்கள்கிழமை தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து... மேலும் பார்க்க