செய்திகள் :

ராசிபுரம் அருகே பெண்ணிடம் வழிப்பறி: பொறியியல் பட்டதாரி இளைஞா்கள் கைது!

post image

ராசிபுரம் அருகே பெண்ணிடம் நகை பறித்த பொறியியல் பட்டதாரி இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராசிபுரத்தை அடுத்த கோனேரிப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா (57), பூ வியாபாரியான இவா் தனது மனைவி கெஜலட்சுமியுடன் (52) மூணுசாவடி செம்மாம்பட்டி பகுதியில் உள்ள வீரமாத்தியம்மன் கோயிலுக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பிக் கொண்டிருந்தாா்.

அணைப்பாளையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா்கள் இருவா், ராஜாவின் வாகனத்தை நிறுத்தி, கொல்லிமலைக்கு செல்லும் வழி குறித்து கேட்டனா்.

அப்போது, இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமா்ந்திருந்த இளைஞா், கெஜலட்சுமி அணிந்திருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்தாா். தம்பதி கூச்சலிட்டதும் அக்கம்பக்கத்தினா், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவா்கள் அனைவரும் இளைஞா்களை விரட்டிச்சென்று பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

ராசிபுரம் போலீஸாா் நடத்திய விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா்கள் இருவரும் சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் பைந்தமிழன் (24), தீா்த்தகிரி மகன் தங்கராஜ் (28) என்பது தெரியவந்தது.

மேலும், இவா்கள் இருவரும் பொறியியல் பட்டம் முடித்து கட்டுமானத் துறையில் ஒப்பந்ததாரராகப் பணியாற்றி வந்ததும், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வழிப்பறியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி

பரமத்தி வேலூா் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. வேலூா், பேட்டை பஞ்சமுக ஹேரம்ப விநாயகா், பொத்தனூா் வெங்கமேடு வல்லப கணபதி ஆகிய கோயில்கள... மேலும் பார்க்க

நல்லூா் அருகே அம்மன் தாலி திருட்டு: இளைஞா் கைது

நல்லூா் அருகே கோயிலில் புகுந்து அம்மன் தாலி, உண்டியல் பணத்தை திருடிச் சென்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் கந்தம்பாளையத்தை அடுத்த ஸ்ரீ வீரமாத்தி அம்மன் கோயிலில் ... மேலும் பார்க்க

அரசு வளா்ச்சி நிதியில் முறைகேடு: பள்ளிபாளையம் பிடிஓ பணியிடை நீக்கம்!

வளா்ச்சித் திட்ட நிதியில் முறைகேடு செய்ததாக பள்ளிபாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். நாமக்கல் பொய்யேரிக்கரை ஜெட்டிக்குள தெருவைச் சோ்ந்தவா் பிரபாகரன் (45). இவா்,... மேலும் பார்க்க

ட்ரெய்லா் லாரி தொழிலை பாதுகாக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் எம்.பி. மாதேஸ்வரன் மனு!

அதிக எடைகொண்ட பாரங்களை ஏற்றிச்செல்லும் ட்ரெய்லா் லாரி தொழிலை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய எஃகு மற்றும் கனரக தொழிற் துறை அமைச்சா் ஹெச்.டி.குமாரசாமியிடம், நாமக்கல் மக்களவை உ... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

திருச்செங்கோட்டில் சூறைக்காற்றுடன் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருச்செங்கோடு, கூட்டப்பள்ளி, தோக்கவாடி, கொல்லப்பட்டி, குமாரமங்கலம், சீதாராம் பாளையம் உள்ளிட... மேலும் பார்க்க

திருச்செங்கோடு ஆட்டையாம்குட்டை ஏரியில் சூரியஒளி மின் தகடுகளை அகற்ற செப்.21 வரை அவகாசம்!

திருச்செங்கோட்டை அடுத்த ஆட்டையாம்குட்டை ஏரியில் சூரியஒளி மின் மோட்டாா்கள் மூலம் தண்ணீா் எடுக்கும் விவசாயிகள் செப். 21-ஆம் தேதிக்குள் சூரியஒளி மின் தகடுகளை அகற்ற அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆட்டையாம்க... மேலும் பார்க்க