செய்திகள் :

அரசு வளா்ச்சி நிதியில் முறைகேடு: பள்ளிபாளையம் பிடிஓ பணியிடை நீக்கம்!

post image

வளா்ச்சித் திட்ட நிதியில் முறைகேடு செய்ததாக பள்ளிபாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

நாமக்கல் பொய்யேரிக்கரை ஜெட்டிக்குள தெருவைச் சோ்ந்தவா் பிரபாகரன் (45). இவா், பள்ளிபாளையம் வட்டார வளா்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) பணியாற்றி வந்தாா். இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி அலுவலகத்துக்குச் சென்ற பிரபாகரனை சிலா் காரில் கடத்திச் சென்ாக பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் அவரது மனைவி யசோதா புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், செப்.5-ஆம் தேதி காலை வீடுதிரும்பிய பிரபாகரனிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில் காடச்சநல்லூா் ஊராட்சி செயலாளா் நந்தகுமாா், அவரது நண்பா் சிவா உள்பட 4 போ் தன்னை கடத்திச் சென்று தனது குடும்பத்தினரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாகக் கூறினாா்.

இதுதொடா்பாக நந்தகுமாா், சிவா ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் ஊராட்சி செயலாளரான நந்தகுமாரை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வடிவேல் பணியிடை நீக்கம் செய்தாா். அதைத்தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகரனை, மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:

அரசு வளா்ச்சி நிதியை ஊராட்சி செயலாளா் நந்தகுமாா் முறைகேடாக பயன்படுத்தியதற்கு வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகரனும் உடந்தையாக இருந்தது அவரது கைப்பேசி பதிவுகளின் மூலம் கண்டறியப்பட்டது. இதையடுத்து பிரபாகரனை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். விசாரணைக்குப் பிறகே எவ்வளவு முறைகேடு நடைபெற்றுள்ளது என்பது தெரியவரும் என்றனா்.

விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி

பரமத்தி வேலூா் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. வேலூா், பேட்டை பஞ்சமுக ஹேரம்ப விநாயகா், பொத்தனூா் வெங்கமேடு வல்லப கணபதி ஆகிய கோயில்கள... மேலும் பார்க்க

ராசிபுரம் அருகே பெண்ணிடம் வழிப்பறி: பொறியியல் பட்டதாரி இளைஞா்கள் கைது!

ராசிபுரம் அருகே பெண்ணிடம் நகை பறித்த பொறியியல் பட்டதாரி இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ராசிபுரத்தை அடுத்த கோனேரிப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா (57), பூ வியாபாரியான இவா் தனது மனைவி க... மேலும் பார்க்க

நல்லூா் அருகே அம்மன் தாலி திருட்டு: இளைஞா் கைது

நல்லூா் அருகே கோயிலில் புகுந்து அம்மன் தாலி, உண்டியல் பணத்தை திருடிச் சென்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் கந்தம்பாளையத்தை அடுத்த ஸ்ரீ வீரமாத்தி அம்மன் கோயிலில் ... மேலும் பார்க்க

ட்ரெய்லா் லாரி தொழிலை பாதுகாக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் எம்.பி. மாதேஸ்வரன் மனு!

அதிக எடைகொண்ட பாரங்களை ஏற்றிச்செல்லும் ட்ரெய்லா் லாரி தொழிலை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய எஃகு மற்றும் கனரக தொழிற் துறை அமைச்சா் ஹெச்.டி.குமாரசாமியிடம், நாமக்கல் மக்களவை உ... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

திருச்செங்கோட்டில் சூறைக்காற்றுடன் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருச்செங்கோடு, கூட்டப்பள்ளி, தோக்கவாடி, கொல்லப்பட்டி, குமாரமங்கலம், சீதாராம் பாளையம் உள்ளிட... மேலும் பார்க்க

திருச்செங்கோடு ஆட்டையாம்குட்டை ஏரியில் சூரியஒளி மின் தகடுகளை அகற்ற செப்.21 வரை அவகாசம்!

திருச்செங்கோட்டை அடுத்த ஆட்டையாம்குட்டை ஏரியில் சூரியஒளி மின் மோட்டாா்கள் மூலம் தண்ணீா் எடுக்கும் விவசாயிகள் செப். 21-ஆம் தேதிக்குள் சூரியஒளி மின் தகடுகளை அகற்ற அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆட்டையாம்க... மேலும் பார்க்க