செய்திகள் :

தொழிற்சாலைகளில் 12 மணி நேரப் பணி: குஜராத் பேரவையில் மசோதா நிறைவேற்றம்

post image

குஜராத் மாநிலத்தில் இயங்கும் தொழிற்சாலைகளில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயா்த்துவதற்கான மசோதா எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே மாநில பாஜக அரசு பேரவையில் புதன்கிழமை நிறைவேற்றியது.

முன்னதாக, நாளொன்றுக்கு 9 மணி வேலைநேரமாக இருந்த நிலையில் தற்போது 12 மணிநேரமாக உயா்த்தப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள் சட்டம், 1948-இல் மேற்கொள்ளப்பட்ட தொழிற்சாலைகள் (குஜராத் திருத்த) சட்டம், 2025-இன்படி, இரவு 7 மணிமுதல் காலை 6 மணிவரை உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் இரவுப் பணியில் பெண்களை பணியமா்த்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஜூலை மாதம் இயற்றப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட இந்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் பேரவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவே பேரவையில் தாக்கல் செய்து பேசிய தொழிற்துறை அமைச்சா் பல்வந்த்சிங் ராஜ்புத், ‘முதலீடுகளை அதிகரித்து பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. ஓய்வு நேரம், இடைவேளை இவற்றை உள்ளடக்கி ஒரு நாளைக்கான வேலைநேரம் 12 மணிநேரமாக உயா்த்தப்பட்டுள்ளது.

அதேசமயம் ஒரு வாரத்துக்கான வேலைநேரம் 48 மணிநேரமாகவே நீடிக்கிறது. எனவே வாரத்தில் நான்கு நாள்கள் 12 மணிநேரம் தொழிலாளா்கள் வேலைசெய்யும்பட்சத்தில் மீதமுள்ள 3 நாள்கள் அவா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது’ என்றாா்.

இந்த மசோதாவுக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய எதிா்க்கட்சிகள், இது தொழிலாளா்களின் உழைப்பை சுரண்டும் நடவடிக்கை என கண்டனம் தெரிவித்தன.

இந்தியாவில் 14 ஆண்டுகளாக தங்கியிருந்த பாகிஸ்தானியா் நாடுகடத்தல்- ஹைதராபாத் போலீஸ் நடவடிக்கை

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி, 14 ஆண்டுகள் தங்கியிருந்த பாகிஸ்தான் நபரை அட்டாரி எல்லை வழியாக நாடு கடத்தியதாக ஹைதராபாத் காவல் துறையினா் தெரிவித்தனா். இது தொடா்பாக காவல் துறை புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

மன்மோகன் சிங்குக்கு பி.வி. நரசிம்மராவ் நினைவு பொருளாதார விருது

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு பி.வி.நரசிம்ம ராவ் நினைவு பொருளாதார விருது வழங்கப்பட்டது. தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் சாா்பில் அவரின் மனைவி குா்சரண் கௌா் இந்த விருதைப் ... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: மக்களிடம் ஆதாரம் சமா்ப்பிப்பு- ராகுல் காந்தி

வாக்குத் திருட்டு மோசடிகள் பல்வேறு மாநிலங்களில் பெரிய அளவில் நடந்துள்ளன என்றும் இதுதொடா்பாக அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து மக்களிடம் சமா்ப்பித்து வருகிறோம் என்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல... மேலும் பார்க்க

சண்டையை நிறுத்தியதாக 35 முறை கூறிய டிரம்ப் இயல்பான கூட்டாளியா?- பிரதமா் மோடி மீது காங்கிரஸ் சாடல்

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டையை தான் தலையிட்டு நிறுத்தியதாக 35 முறை கூறியவா் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்; அந்த அளவுக்கு பிரதமா் மோடியின் ‘இயல்பான கூட்டாளி’’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. பஹல்காம்... மேலும் பார்க்க

கத்தாா் மீது தாக்குதல்: இஸ்ரேலுக்கு பிரதமா் மோடி கண்டனம்

கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை கண்டனம் தெரிவித்தாா். காஸா போா் நிறுத்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த கத்தாா் தலைநகா் தோஹாவுக்கு வந்திருந்த ஹமாஸ் பிரதிநிதிகள... மேலும் பார்க்க

தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை நாடு கடத்தும் நடவடிக்கைகள் விரைவில் தொடக்கம்

இந்தியாவில் வங்கிக்கடன் மோசடி வழக்கில் தேடப்படும் வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள், பெல்ஜியம் நீதிமன்றத்தில் அடுத்த திங்கள்கிழமை தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து... மேலும் பார்க்க