செய்திகள் :

மயிலாடுதுறை: சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி; குடிநீருக்கு அல்லாடும் மக்கள்.. நிலை மாறுமா?

post image

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே மாதிரிவேளூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூங்குடி கிராமத்தில் 30 ஆண்டுகள் பழைமையான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. பூங்குடியைச் சுற்றியுள்ள பெரியத்தெரு, காலனித்தெரு, பள்ளிக்கூடத்தெரு, நடுத்தெரு, புதுத்தெரு பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளைச் சேர்ந்த மக்கள், இதன்மூலம் குடிநீர் பெற்று பயனடைகின்றனர்.

இந்த நிலையில், இந்த நீர்த்தேக்கத் தொட்டியானது சிதிலமடைந்து, விரிசல்கள் ஏற்பட்டு, அபாயகரமாக இருப்பது, மக்களுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த தொட்டியை ஒட்டியே அங்கன்வாடி மையமும் அமைந்திருப்பதால், அங்கு வரும் பிள்ளைகளின் பெற்றோர்கள் வலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அந்தப் பகுதி பொதுமக்கள், ``இந்த நீர்த்தேக்கத் தொட்டிய கட்டி முப்பது வருசத்துக்கு மேல ஆயிடுச்சி. இப்ப நெறைய இடத்துல விரிசல் விட்டுருக்கு, எப்ப விழும்னு பயமாவே இருக்கு. நீர் கசியுது, இதனால எங்களுக்கு தண்ணி கம்மியா வருது. சுத்தம் பண்ணா இடிஞ்சு விழுந்துடும்னு பயத்துல சுத்தம் செய்யுறதே இல்ல. அத்தி பூத்தது போல எப்பவாச்சும் தான் சுத்தம் செய்யுறாங்க. இதுனால தண்ணி தூசியா வருது. சுத்தம் பண்ணாலும், கொஞ்ச நாள்தான் தண்ணி நல்லா வரும். இல்லாட்டி திரும்வும் தூசியா மங்களாத்தான் தண்ணி வரும்.

இதனால இந்த தண்ணிய யாருமே குடிக்கிறது இல்ல. எங்களுக்கெல்லாம் குடிநீர் கிடைக்கிறதே ரொம்ப கஷ்டமா இருக்கு. போர் போட்டு இருக்குறவங்க வீட்ல குடிக்க மட்டும் தண்ணி எடுத்துப்போம். நாங்களும் அஞ்சு வருசமாயும் இதத்தான் கோரிக்கையா வைக்கிறோம். ஆனா, இந்த தொட்டிய புதுசா கட்டியும் கொடுக்கல, எங்களுக்கு சுத்தமான குடிநீரும் கெடைக்கல... குடிக்கிற தண்ணிக்கே அடுத்த வீட்ட நம்பித்தான் இருக்கோம்" என ஆதங்கத்தை வெளிப்படுத்தியவர்கள்,

``இந்த தொட்டிக்கு பக்கத்துல குழந்தைங்க படிக்குற பால்வாடி இருக்கு. இதுல 20 குழந்தைங்க படிக்கிறாங்க. இந்த தொட்டியால பால்வாடிய சுத்தி புள்ளு காடா மண்டி கெடக்கு. இந்த புல்லுக்கு இடையில பூச்சி ஏதாச்சம் இருந்தாக்கூட சீக்கிரம் கண்ணுக்கு தெரிய‌‌ மாட்டிக்குது. தொட்டி இடிஞ்சு விழுந்துடுமோ ஏதாச்சம் பூச்சி கடிச்சிடுமோன்னு பயத்துலயேதான் குழந்தைகள பால்வாடிக்கு அனுப்புறோம்" என்றனர்.

இது குறித்து மாதிரிவேளூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் காமராஜிடம் பேசியபோது, "இதே போன்று சிதிலமடைந்த நிலையில் 9 நீர்த்தேக்கத் தொட்டிகள் இருந்தது. கிராம சபை கூட்டத்தின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் 4 நீர்த்தேக்கத் தொட்டிகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. விரைவில் மீதமுள்ள நீர்த்தேக்கத் தொட்டிகளும் கட்டப்படும்" என்று கூறினார்.

எவ்வித அசம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன் கிராம நிர்வாகமும், வட்டாட்சி நிர்வாகமும் உரிய கவனம் செலுத்தி புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து, குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது!

``சிறையில் உயிர்வாழ முடியாது; விஷம் கொடுங்கள்'' - நடிகர் தர்ஷன் வாதம்; நீதிபதி கொடுத்த உத்தரவு

பிரபல கன்னட நடிகரான தர்ஷனின் தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் வம்பிழுத்த தர்ஷனின் ரசிகர் ரேணுகா சுவாமி என்பவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த வழக்கில... மேலும் பார்க்க

Trump: ``எனது நண்பர் பிரதமர் மோடியுடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன்'' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்ததால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்சிஓ) சீனா மற்றும் ரஷ்ய அதிபர்களு டன்... மேலும் பார்க்க

TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்; நவம்பர் 15, 16 ஆம் தேதிகளில் தேர்வு

'ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்' எனச் செப்டம்பர் 1ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேலும், 'அவ... மேலும் பார்க்க

``அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு சரிவது ஏன்?'' -நிர்மலா சீதாராமன் பதில்

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பு சரிவுஇது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார். "இந்திய ரூபாய... மேலும் பார்க்க

ஏர்போர்ட் மூர்த்தி மீது நடந்த தாக்குதல்; "இதுதான் திராவிட மாடலா?"- நயினார் நாகேந்திரன் கண்டனம்

சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அலுவலக வாயிலில், புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏர்போர்ட் மூர்த்தி, ... மேலும் பார்க்க

எலி கடித்து இறந்த குழந்தைகள்: ``இந்தூரில் நடந்தது விபத்து அல்ல கொலை..!" - அரசை விமர்சிக்கும் ராகுல்

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரின் மகராஜா யஸ்வந்த்ராவ் மருத்துவமனையின் (MYH) தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) புதிதாகப் பிறந்த இரண்டு குழந்தைகளை விரல், தலை, தோள்பட்டை பகுதியில் எலிகள் கடித்திருக்கின்றன. ... மேலும் பார்க்க