செய்திகள் :

திருப்பூர்: போதையில் காரை ஓட்டி விபத்து; முதியவர் உயிரிழப்பு.. திமுக பேரூராட்சித் தலைவரிடம் விசாரணை!

post image

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் கருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (57). அப்பகுதியில் உள்ள தேநீர்க் கடைக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் இன்று மாலை வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். சாமளாபுரம்-காரணம்பேட்டை சாலையில் கருகம்பாளையம் அரசுத் தொடக்கப் பள்ளி அருகே வந்தபோது, அவருக்குப் பின்னால் வந்த கார் ஒன்று, பழனிசாமியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், பலத்த காயமடைந்த பழனிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பேரூராட்சித் தலைவர் பழனிசாமி

பழனிசாமி மீது மோதிய காரை ஓட்டி வந்தவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் மங்கலம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். போலீஸாரின் தொடர் விசாரணையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு, தப்பிச்சென்றது திமுக-வைச் சேர்ந்த சாமளாபுரம் பேரூராட்சித் தலைவர் பழனிசாமி (60) என்பது தெரியவந்தது. மேலும் அவர் மது போதையில் இருந்த நிலையில், இந்த விபத்தை ஏற்படுத்தியதும் போலீஸாரின் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, சாமளாபுரம் பேரூராட்சித் தலைவர் பழனிசாமியை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த பழனிசாமி சாலை உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளுக்காக தொடர்ந்து மனு அளித்தவர் என்பதால், முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்: ஒன்றரை வயது குழந்தையை காவு வாங்கிய தண்ணீர் வாளி! – சோகத்தில் முடிந்த விளையாட்டு

கடலூர் குமாரப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர் – ஞானசவுந்தரி தம்பதிக்கு, கடந்த 2023-ம் ஆண்டு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு குணஸ்ரீ, குகஸ்ரீ என பெயர் வைத்து மகிழ்ந்தனர் சிவசங்கரும், ஞ... மேலும் பார்க்க

நீலகிரி: ஊட்டியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை விழிப்புணர்வு ஒத்திகை | Photo Album

Ooty: ஊட்டிக்கு சுற்றுலா போறீங்களா? எமரால்டு ஏரியை மறந்துடாதீங்க.. சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEkவணக்கம்,... மேலும் பார்க்க

மேடையில் சுருண்டு விழுந்து இறந்த சட்டசபை ஊழியர்; அரசு ஓணம் கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்!

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை இந்த ஆண்டு 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கேரள மாநிலத்தின் வசந்தவிழா என்பதால் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்து தரப்பினரும் அத்தப்பூ கோலம... மேலும் பார்க்க

கரூர்: மூளைச்சாவு அடைந்த சிறுமி; உறுப்பு தானம் செய்து 5 பேரின் உயிரைக் காத்த பெற்றோர்; என்ன நடந்தது?

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள சீரங்கவுண்டனூரைச் சேர்ந்தவர்கள் ரவி, செல்வநாயகி தம்பதியினர். இவர்களுக்கு, தன்யா, ஓவியா (வயது 7) என்று இரண்டு மகள்கள் இருந்தனர். இவர்கள் குடும்பத்துடன் ஓசூர் பக... மேலும் பார்க்க

சென்னை: விஷப்பூச்சி கடித்து இளம் பெண் மரணம்? காவல்துறை சொல்வது என்ன?

சென்னையில் விஷப் பூச்சி கடித்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை, ஆவடி, கண்ணப்பாளையம், பாரதி நகரைச் சேர்ந்தவர் சர்மிளா (19).கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29ம் தேதி) ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு; குற்றாலம் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!

ராமநாதபுரம் செட்டியார் தெருவில் வசித்து வந்தவர் கோவிந்தராஜன். அரிசி வியாபாரம் செய்து வரும் இவர் தனது மனைவி யமுனா மற்றும் மகன், மகள் ஆகியோருடன் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதற்காக நேற்று நள்... மேலும் பார்க்க