செய்திகள் :

கடலூர்: ஒன்றரை வயது குழந்தையை காவு வாங்கிய தண்ணீர் வாளி! – சோகத்தில் முடிந்த விளையாட்டு

post image

கடலூர் குமாரப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர் – ஞானசவுந்தரி தம்பதிக்கு, கடந்த 2023-ம் ஆண்டு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு குணஸ்ரீ, குகஸ்ரீ என பெயர் வைத்து மகிழ்ந்தனர் சிவசங்கரும், ஞானசவுந்தரியும்.

சிவசங்கர் நேற்று காலை வழக்கம்போல வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தபோது, வீட்டின் பின் பகுதியில் குணஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியில் திடீரென தவறி விழுந்து மூழ்கினார் குழந்தை குணஸ்ரீ.

அதை யாரும் கவனிக்காததால் மூச்சுத் திணறிய குணஸ்ரீ உடனே மயங்கிப் போனார். வேலைக்கு செல்வதற்கு முன்பு குழந்தைகளை கொஞ்சிவிட்டு செல்லும் சிவசங்கர், குணஸ்ரீயை தேடியிருக்கிறார். அப்போதுதான் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை காணாமல் போனது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

குழந்தை உயிரிழப்பு

அதையடுத்து வீடு மற்றும் அக்கம்பக்கத்தில் தேடிய அவர்கள், இறுதியாக குணஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்த இடத்தில் தேடினர். அப்போது சந்தேகமடைந்து அங்கிருந்த வாளிக்குள் பார்த்தபோது, அதில் குழந்தை தலைகுப்புற மயங்கிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அதைப் பார்த்து அலறித் துடித்த அவர்கள், குழந்தையை கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு குழந்தை குணஸ்ரீயை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவரும் நிலையில், ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்த விவகாரம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நீலகிரி: ஊட்டியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை விழிப்புணர்வு ஒத்திகை | Photo Album

Ooty: ஊட்டிக்கு சுற்றுலா போறீங்களா? எமரால்டு ஏரியை மறந்துடாதீங்க.. சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEkவணக்கம்,... மேலும் பார்க்க

மேடையில் சுருண்டு விழுந்து இறந்த சட்டசபை ஊழியர்; அரசு ஓணம் கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்!

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை இந்த ஆண்டு 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கேரள மாநிலத்தின் வசந்தவிழா என்பதால் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்து தரப்பினரும் அத்தப்பூ கோலம... மேலும் பார்க்க

கரூர்: மூளைச்சாவு அடைந்த சிறுமி; உறுப்பு தானம் செய்து 5 பேரின் உயிரைக் காத்த பெற்றோர்; என்ன நடந்தது?

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள சீரங்கவுண்டனூரைச் சேர்ந்தவர்கள் ரவி, செல்வநாயகி தம்பதியினர். இவர்களுக்கு, தன்யா, ஓவியா (வயது 7) என்று இரண்டு மகள்கள் இருந்தனர். இவர்கள் குடும்பத்துடன் ஓசூர் பக... மேலும் பார்க்க

சென்னை: விஷப்பூச்சி கடித்து இளம் பெண் மரணம்? காவல்துறை சொல்வது என்ன?

சென்னையில் விஷப் பூச்சி கடித்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை, ஆவடி, கண்ணப்பாளையம், பாரதி நகரைச் சேர்ந்தவர் சர்மிளா (19).கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29ம் தேதி) ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு; குற்றாலம் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!

ராமநாதபுரம் செட்டியார் தெருவில் வசித்து வந்தவர் கோவிந்தராஜன். அரிசி வியாபாரம் செய்து வரும் இவர் தனது மனைவி யமுனா மற்றும் மகன், மகள் ஆகியோருடன் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதற்காக நேற்று நள்... மேலும் பார்க்க

மும்பை: முதல் பிறந்தநாள், கேக் வெட்டிய சில மணி நேரத்தில் சோகம்; கட்டிடம் இடிந்து 14 பேர் உயிரிழப்பு

மும்பையில் கடந்த இரண்டு வாரமாக கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. மும்பை அருகே உள்ள விராரில், விஜய் நகரில் இருக்கும் ரமாபாய் அபார்ட்மெண்ட் என்ற நான்கு மாடி கட்டிடம் நேற்று அதிகாலை த... மேலும் பார்க்க