செய்திகள் :

ம.க.ஸ்டாலினை கொல்ல முயற்சி: ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் குண்டு வீச்சு!

post image

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவரை வெள்ளிக்கிழமை குண்டு வீசி கொலை செய்ய முயற்சித்த நபர்கள், உடன் சென்ற இருவரை அரிவாளால் வெட்டி தப்பிச் சென்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ம. க. ஸ்டாலின். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட செயலராகவும் உள்ளார். வெள்ளிக்கிழமை ம. க. ஸ்டாலின் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தார். அப்போது திடீரரென்று அங்கு வந்த கும்பல் ம. க. ஸ்டாலின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.

அவர் அலுவலகத்திற்குள் நுழையும் போது வீசியதால் அருகில் இருந்த ஜன்னல்களில் பட்டு கண்ணாடிகள் சிதறின. அலுவலக கதவும் சிதறியது. அதிர்ச்சியடைந்த ம.க. ஸ்டாலின் அலுவலகத்திற்குள் சென்று விட்டார். பின்னர் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், ம. க. ஸ்டாலினுடன் சென்ற இளையராஜா, அருண் ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.

இலங்கையில் பள்ளத்தில் கவிழ்ந்த பயணிகள் பேருந்து! 15 பேர் பலி!

தகவல் கிடைத்ததும் திருவிடைமருதூர் காவல் கோட்ட துணைக்கண்காணிப்பாளர் கே. ராஜூ சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் குண்டு வெடித்த இடத்தை பார்வையிட்டார். ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவரை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவரை குண்டு வீசி கொலை செய்ய முயன்ற போது சிதறிய கதவு மற்றும் கண்ணாடி.

கடலூர் சிப்காட் ஆலையில் ரசாயன கசிவு! 40 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட ரசாயன கசிவால் பாதிக்கப்பட்ட 40-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயன உற்பத்... மேலும் பார்க்க

கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்

கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன்(90) வயது மூப்பின் காரணமாக சென்னையில் இன்று காலமானார். இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களையும் ஐந்தாயிரத்திற்கும் மேலான பக்திப் பாடல்க... மேலும் பார்க்க

ம.க.ஸ்டாலின் மீது கொலை முயற்சி- நயினார் நாகேந்திரன் கண்டனம்

பாமக நிர்வாகியைக் கொலை செய்ய முயற்சித்தோரைக் கைது செய்ய வேண்டும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், பாமகவின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் ம.க.... மேலும் பார்க்க

3ஆவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது: சென்னை உயர் நீதிமன்றம்

3ஆவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருபவர் ரஞ்சிதா. இவர், மகப்ப... மேலும் பார்க்க

தேனியில் எடப்பாடி பழனிசாமி வாகனம் முற்றுகை! ‘ஒன்றிணைய வேண்டும்’ என பெண்கள் முழக்கம்!

தேனி மாவட்டம் கம்பத்தில் பிரசாரம் மேற்கொள்ள சென்ற அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனம் முற்றுகையிடப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.Edappadi Palaniswami's vehicle bloc... மேலும் பார்க்க

தாம்பரத்திலிருந்து புறப்படும் பாண்டியன், சோழன் உள்பட 5 விரைவு ரயில்கள்! செப்.10 முதல்.!

பாண்டியன், சோழன், மலைக்கோட்டை உள்பட 5 விரைவு ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்துவரும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, ஆறு ... மேலும் பார்க்க