செய்திகள் :

3ஆவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது: சென்னை உயர் நீதிமன்றம்

post image

3ஆவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருபவர் ரஞ்சிதா. இவர், மகப்பேறு விடுப்பு கோரி விண்ணப்பித்திருக்கிறார்.

ஆனால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், 3வது முறையாக கருவுற்ற மனுதாரர் ரஞ்சிதாவுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளது.

பா.ஜ.க. அமைச்சர் வாங்கிய ரூ. 75 லட்சம் அமெரிக்க டெஸ்லா கார்!

மேலும், குழந்தை பிறப்புக்கு முன்பும், பின்பும் வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு ஆதரவாகவே மகப்பேறு விடுப்பு வழங்க கொள்கை முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது பிரசவத்துக்கு விடுப்பு மறுப்பது நியாயமற்றது.

மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

The Madras High Court has said that denying maternity leave for the third delivery is unfair.

பட்ட மேற்படிப்பு பயில ரூ.3.60 கோடி ஒதுக்கீடு: மனிதநேய மக்கள் கட்சி பாராட்டு

இஸ்லாமிய மாணவ, மாணவிகள் 10 போ் வெளிநாடுகளுக்குச் சென்று பட்ட மேற்படிப்பு பயில, ரூ.3.60 கோடி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு மனிதநேய மக்கள் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் தலை... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி: பெ. சண்முகம்

டிரம்ப் என்ற தனி நபரின் விருப்பு வெறுப்பால் விதிக்கப்பட்டுள்ள வரியால் இந்தியா பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா். இந்தியா மீதான அமெர... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளுக்கு தூதுவா் நியமனம்: அவகாசம் நீட்டிப்பு

அரசுப் பள்ளிகளில் முன்னாள் மாணவா்களை தூதுவா்களாக நியமிப்பதற்கான அவகாசம் செப்.23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள... மேலும் பார்க்க

சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: கன்னியாகுமரி மாவட்ட மாணவி முதலிடம்

சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிட்டாா். அதில் கன்னியாகுமரி மாவட்ட மாணவி முதலிடம் பிடித்துள்ளாா். இந்தி... மேலும் பார்க்க

தமிழகத்தைச் சோ்ந்த நால்வருக்கு விருது

சிறப்பாக கல்விப்பணியற்றி வரும் ஆசிரியா்களுக்கு வழங்கப்படும் தேசிய நல்லாசிரியா் விருதை சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பேராசிரியா் சங்கா் ஸ்ரீராம் சங்கரன் உள்பட தமிழகத்தைச் சோ்ந்த நான்கு பேருக்கு குடியரசுத் தல... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புதிய டிஜிபி நியமனம்: அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புதிய டிஜிபி நியமனத்தை மேற்கொள்ள அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் வரதராஜ் என்பவா் தாக்கல் செய்த பொ... மேலும் பார்க்க