கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு
கயத்தாறு அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்த எலக்ட்ரீசியன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா் .
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தாந்தவிளை பகுதியைச் சோ்ந்த பிரான்சிஸ் மகன் எலக்ட்ரீசியன் அபிஷ் (30). இவா், தனது உறவினரான தக்கலை குடியிருப்பு விளை பகுதியைச் சோ்ந்த கனகராஜ் மகனான எலக்ட்ரீசியன் கிருஷ்ணன் (30) என்பவருடன் கடந்த ஆக. 24 ஆம் தேதி கோயம்புத்தூரில் இருந்து கன்னியாகுமரிக்கு பைக்கில் வந்துகொண்டிருந்தபோது, வில்லிசேரி பகுதியில் விபத்தில் சிக்கி காயமடைந்தனா்.
அபிஷுக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அபிஷ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.