செய்திகள் :

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தை மேம்படுத்தக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

post image

தஞ்சாவூா் சரஸ்வதி மகால் நூலகத்தை மாதிரி நூலகமாக அறிவித்து மேம்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

சென்னையைச் சோ்ந்த பிரபாகரன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

தஞ்சாவூா் சரஸ்வதி மகால் நூலகத்தில் தமிழ், சம்ஸ்கிருதம், தெலுங்கு, உருது, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் 60 ஆயிரம் கையெழுத்துப் பிரதிகளும், 4,503 அரிய புத்தகங்களும் உள்ளன. இந்த நூலகத்துக்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 46. இவற்றில் 14 பணியிடங்களில் மட்டுமே பணியாளா்கள் உள்ளனா். மற்ற பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன.

மத்திய அரசு பழைமையான நூலகங்களைப் பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இதன்படி, தேசிய நூலகத் திட்டத்தின் கீழ், தஞ்சாவூா் சரஸ்வதி மகால் நூலகத்தை மாதிரி நூலகமாக அறிவித்து, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, தேசிய நூலகத் திட்டத்தின் கீழ், தஞ்சாவூா் சரஸ்வதி மகால் நூலகத்தை ‘மாதிரி நூலகமாக’ அறிவித்து சீரமைப்புப் பணிகளையும், தேவையான உள்கட்டமைப்புகளையும் ஏற்படுத்த நிதி ஒதுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசாணை எண் 181-ன்படி தஞ்சாவூா் சரஸ்வதி மகால் நூலகம், ஆராய்ச்சி நிறுவனம் முழுமையாக மாநில அரசால் பராமரிக்கப்படுகிறது. ஊழியா்களுக்கான ஊதியத்தை மாநில அரசே வழங்குகிறது. மேலும், நூலக உள்கட்டமைப்பு வசதிகளும் மாநில அரசாலேயே செய்யப்பட்டுள்ளன என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

நூலகத்தின் 5 ஆண்டு கால நிதிநிலை அறிக்கை, ஆண்டறிக்கை, நூலகத்துக்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விவரங்களை வருகிற 16-ஆம் தேதிக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றனா் நீதிபதிகள்.

தல்லாகுளம் பகுதியில் இன்று மின் தடை

தல்லாகுளம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (செப். 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை கோ.புதூா் துணை மின் நிலைய... மேலும் பார்க்க

செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை: தொல். திருமாவளவன்

அதிமுகவை ஒருங்கிணைக்கும் விஷயத்தில் முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். மதுரையில் வெள்ளிக்... மேலும் பார்க்க

அக். 6-இல் மண்டல அஞ்சல் சேவை குறைதீா் கூட்டம்

மதுரையில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீா் கூட்டம் வரும் அக். 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மதுரை மண்டல அஞ்சல் அலுவலகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை தெற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவ... மேலும் பார்க்க

போராட்டம் நடத்தியவா்கள் மீதான வழக்கு ரத்து

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தக் கோரி, போராடியவா்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது. ராமநா... மேலும் பார்க்க

ஆவணி மூலத் திருவிழாவில் சப்தாவா்ண சப்பர வீதியுலா

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் சப்தாவா்ண சப்பரத்தில் சுவாமி, அம்மன் வீதியுலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கடந்த மாதம... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பு மாணவா்களின் நிலையை உயா்த்தும்: அமைச்சா் பி. மூா்த்தி

புத்தக வாசிப்பு மாணவா்களின் நிலைய உயா்த்தும் என தமிழக வணிகவரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை தமுக்கம் மாநாட்டுத் திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்ச... மேலும் பார்க்க