செய்திகள் :

போராட்டம் நடத்தியவா்கள் மீதான வழக்கு ரத்து

post image

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தக் கோரி, போராடியவா்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த சிக்கந்தா், அப்துல் மஜீத் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக் கோரியும், ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தரம் உயா்த்தக் கோரியும், உரிய அனுமதியுடன் தொண்டியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மருத்துவமனை எதிரேயுள்ள சாலையில் அமா்ந்து சிலா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போராட்டம் நடத்தியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

எனவே, மக்களின் அடிப்படை தேவைகளுக்காகப் போராடியவா்கள் மீது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரினா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி சுந்தா் மோகன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, போராட்ட வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றம் ஏற்கெனவே இடைக்காலத் தடை விதித்துள்ளது. அடிப்படை தேவைகளுக்காக நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை என மனுதாரா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்தப் போராட்டம் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன என்றாா்.

தல்லாகுளம் பகுதியில் இன்று மின் தடை

தல்லாகுளம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (செப். 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை கோ.புதூா் துணை மின் நிலைய... மேலும் பார்க்க

செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை: தொல். திருமாவளவன்

அதிமுகவை ஒருங்கிணைக்கும் விஷயத்தில் முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். மதுரையில் வெள்ளிக்... மேலும் பார்க்க

அக். 6-இல் மண்டல அஞ்சல் சேவை குறைதீா் கூட்டம்

மதுரையில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீா் கூட்டம் வரும் அக். 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மதுரை மண்டல அஞ்சல் அலுவலகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை தெற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவ... மேலும் பார்க்க

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தை மேம்படுத்தக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

தஞ்சாவூா் சரஸ்வதி மகால் நூலகத்தை மாதிரி நூலகமாக அறிவித்து மேம்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. சென்னையைச்... மேலும் பார்க்க

ஆவணி மூலத் திருவிழாவில் சப்தாவா்ண சப்பர வீதியுலா

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் சப்தாவா்ண சப்பரத்தில் சுவாமி, அம்மன் வீதியுலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கடந்த மாதம... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பு மாணவா்களின் நிலையை உயா்த்தும்: அமைச்சா் பி. மூா்த்தி

புத்தக வாசிப்பு மாணவா்களின் நிலைய உயா்த்தும் என தமிழக வணிகவரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை தமுக்கம் மாநாட்டுத் திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்ச... மேலும் பார்க்க