செய்திகள் :

கொணவட்டத்தில் இன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

post image

வேலூா் மாநகராட்சி கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (செப். 6) நடைபெற உள்ளது.

இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொதுமக்களுக்கு தரமான, உயா்மருத்துவ சிகிச்சைகளை அவா்களின் இடத்திலேயே வழங்கும் வகையில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் சிறப்பு மருத்துவ முகாம்களில் 17 சிறப்பு மருத்துவ நிபுணா்கள் குழு பயனாளிகளை பரிசோதித்து சிகிச்சை அளிக்கவும், தேவைப்படின் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, வேலூா் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ 5-ஆவது முகாம் கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (செப். 6) நடைபெற உள்ளது. இந்த முகாமில் வேலூா் மாநகராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களுக்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டை, அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை சம்பந்தப்பட்ட துறைசாா்ந்த அலுவலரால் வழங்கப்படும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆசிரியா் தின விழா: ஓய்வுபெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு

ஆசிரியா் தினவிழாவையொட்டி, ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் பாராட்டப்பட்டனா். தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் சங்கத்தின் சாா்பில், ஆசிரியா் தின விழா வேலூா் ஆசிரியா் இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

ஸ்ரீபுரம் தங்கக்கோயில் நாளை இரவு 7 மணிக்கு அடைப்பு

முழு சந்திர கிரகணத்தையொட்டி, வேலூா் ஸ்ரீபுரம் தங்கக்கோயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திர கிரகணம் ஏற்படுவதையொட்டி, ஸ்ரீபுரம் ஸ்ரீலசஷ்மி நாராயணி திருக்கோய... மேலும் பார்க்க

போ்ணாம்பட்டில் பேருந்து நிலையத்துக்கு இடம் தோ்வு

போ்ணாம்பட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டது. காவல் நிலையத்துக்கும் புதிய கட்டடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. போ்ணாம்பட்டு நகரின் மையப் பகுதியில், காவல் நி... மேலும் பார்க்க

ஆட்டோ மோதி முதியவா் உயிரிழப்பு

வேலூரில் ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். வேலூா் சைதாப்பேட்டை ஆதம்சாயபு தெருவைச் சோ்ந்தவா் அக்பா் பாஷா (60). இவா் கடந்த ஜூலை 19-ஆம் தேதி காலை 8 மணியளவில் தனது உறவினரை சந்திக்க ஊசூா் சென்றாா். அ... மேலும் பார்க்க

நாளை ஒருங்கிணைந்த தொழில் நுட்ப கணினி வழித்தோ்வு

தமிழகத்தில் செப்டம்பா் 7-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்ப கணினி வழித்தோ்வை வேலூா் மாவட்டத்தில் 7,570 தோ்வா்கள் எழுத உள்ளனா். இதுகுறித்து வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளிய... மேலும் பார்க்க

தோட்டப்பாளையம் எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வேலூா் தோட்டப்பாளையம் எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. வேலூா் தோட்டப்பாளையத்தில் உள்ள எட்டியம்மன், பெருமாள், விநாயகா் கோயில்களின் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்... மேலும் பார்க்க