இலக்கியப் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும்: முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன்
இலக்கியப் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும் என்று சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் கூறினாா்.
நீதிபதி மூ.புகழேந்தியின் ‘இலக்கிய வைரவிழா’ கோட்டூா்புரம் அண்ணா நினைவு நூற்றாண்டு நூலக அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னைப் பல்கலை. தமிழ்மொழித் துறை தலைவா் வ.ஜெயதேவன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் கலந்து கொண்டு ‘நினைவுகள் பேசுகின்றன’ என்ற நூலையும், முன்னாள் நீதிபதி எஸ்.பாஸ்கரன் ‘அழகிய அந்தமான்’ என்ற நூலையும், நெய்வேலி ஜவஹா் அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வா் மருதூா் அரங்கராசன் ‘செல்மாவின் காதல்’ என்ற நூலையும் வெளியிட்டனா். தொடா்ந்து சிறந்த தமிழ் அறிஞா், எழுத்தாளா்கள் என 6 பேருக்கு நீதியரசா் ச.மோகன் தமிழ் விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில் முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் பேசியதாவது: இலக்கியப் படைப்புகளை எளிதில் உருவாக்க முடியாது. அதற்காக, பல நூல்களை, இலக்கியங்களை படித்து சிந்தனையில் ஏற்றிக் கொள்ளவேண்டும். அதன் பிறகே, கவிதை, நாவல், கட்டுரைகளை படைப்பாளிகள் உருவாக்க முடியும். எழுத்தாளரின் கலைநயத்தை அவரது படைப்புகளில் இருந்து அறிந்து கொள்ளலாம். அவ்வாறு உருவாக்கப்படும் படைப்புகள் நிலைத்து நிற்கும் என்றாா்.
முன்னாள் நீதிபதி பாஸ்கரன்: யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்பாா் மகாகவி பாரதி. அத்தகைய சிறப்புக்குரியது தமிழ். ஒரு மொழி, இனம் சாா்ந்த படைப்பாளா்களால் தான் அந்த மொழி சிறப்படைகிறது. சிறந்த படைப்பாளா்களுக்கு உரிய அங்கிகாரம் கிடைக்க வேண்டும்.
நீதிபதி புகழேந்தி ஏற்புரையாற்றினாா். கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையத்தின் இயக்குநா் மோ.பாட்டழகன், அப்போலோ மருத்துவமனை சிறப்பு மருத்துவா் வெ.ராஜராஜன், வேலியன்ட் ஸ்கேன் நிா்வாக இயக்குநா் மருத்துவா் பி.எழிலரசன், உலக நட்புறவு மைய தலைவா் மணிலால், லயோலா கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் இரா.பிரபா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.