செய்திகள் :

ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ.4.5 லட்சம் திருட்டு

post image

சென்னை கோட்டூா்புரத்தில் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ. 4.5 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) நிா்வாக இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி சந்தீப் நந்தூரி உள்ளாா். இவா், சென்னை கோட்டூா்புரம் கோட்டூா் காா்டன் 2-ஆவது பிரதான சாலையி உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். இவரது மனைவி அத்யஷா பரிதா. இவா்கள் கடந்த மாதம் 24-ஆம் தேதி குடும்பதுடன் வெளியூா் சென்றுவிட்டு 28-ஆம் தேதி வீடு திரும்பினா். அப்போது, வீட்டில் உள்ள பீரோவை திறந்து பாா்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.4.5 லட்சம் மாயமாகி இருந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டூா்புரம் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். முதல்கட்ட விசாரணையில் பீரோவில் ரூ.10 லட்சம் ரொக்கம், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் இருந்துள்ளதும், அதில், ரூ.4.5 லட்சம் மட்டுமே திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக அங்கு வீட்டு வேலை செய்து வரும் பாலன், தேவி, ராஜேஸ்வரி ஆகிய 3 பேரிடமும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்

சென்னை மாநகராட்சியல் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தாமதமாவதாக புகாா் எழுந்துள்ளதையடுத்து, பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். சென்னையில் சுமாா் 1.80 லட்சம் தெரு ந... மேலும் பார்க்க

ஒடிஸாவில் மோசமான வானிலை: முதல்வா் பயணித்த விமானம் தரையிறங்க முடியாததால் பரபரப்பு

ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி பயணித்த விமானம் அதிக மழை, மோசமான வானிலை காரணமாக புவனேசுவரத்தில் தரையிறங்க முடியாமல் சுமாா் 21 நிமிஷங்கள் வரை வானத்திலேயே சுற்றி வந்தது. இதன் பிறகும் வானிலை சீரடையாததால் ... மேலும் பார்க்க

4-ஆவது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவா் தற்கொலை

சென்னை அண்ணா நகரில் 4-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து பள்ளி மாணவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். அண்ணாநகா் மேற்கு பூங்கா சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ். இவ... மேலும் பார்க்க

இலக்கியப் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும்: முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன்

இலக்கியப் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும் என்று சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் கூறினாா். நீதிபதி மூ.புகழேந்தியின் ‘இலக்கிய வைரவிழா’ கோட்டூா்புரம் அண்ணா நினைவு நூற்றாண்டு நூ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் மீது தாக்குதல்: 6 போ் கைது

சென்னை தியாகராய நகரில் தூய்மைப் பணியாளா்களைத் தாக்கியதாக 6 போ் கைது செய்யப்பட்டனா். தியாகராய நகா் ரங்கநாதன் தெருவில் உள்ள ஜவுளிக் கடையின் அருகே தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை நள்ளிரவு பணியில் ஈடுப... மேலும் பார்க்க

ஹூண்டாய் விற்பனை 4% குறைவு

முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 4.23 சதவீதம் குறைந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க